Close Menu
    What's Hot

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!
    தமிழ்நாடு

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    Editor web3By Editor web3February 25, 2026Updated:February 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthil balaj annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புழல் சிறைக்கு சென்று வந்த பிறகும் செந்தில் பாலாஜியிடம் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் நடைபெற்ற பாஜக சார்பில் தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    தமிழகம் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பெருமையாகக் கூறி வருகிறார். ஆனால், எதார்த்த நிலவரம் வேறாக உள்ளது என்று அண்ணாமலை சாடினார். “தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத் துறையில் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, புதிய அணைகளும் கட்டப்படவில்லை. அமராவதி ஆற்றின் உபரி நீரை முறையாகக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும். அடிப்படைப் பணிகளைச் செய்யாமல் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதாகக் கூறுவது வெறும் கண்துடைப்பு” என்று அவர் விமர்சித்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியை இலக்கு வைத்துப் பேசிய அண்ணாமலை, கரூரில் தொடங்கி கோவை, சென்னை வரை ‘கரூர் குரூப்’ என்ற பெயரில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார். “300 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வந்த பிறகும், அதே பழைய வேலைகளையே அவர் செய்து வருகிறார். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குப் பணம் வசூலிக்க 20 பேர் கொண்ட கும்பலை வைத்துள்ளனர். இவர்களுடைய இந்தச் செயலால் கரூரில் உள்ள நேர்மையான மக்களுக்குத் தேவையற்ற தலைகுனிவு ஏற்பட்டுள்ளது” என அவர் பேசினார்.

    செந்தில் பாலாஜி தற்போது கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடத் திட்டமிடுவதையும் அண்ணாமலை கிண்டல் செய்தார். “கரூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு இப்போது கோவைக்கு மாற நினைக்கிறார். ஒரு தனி நபரால் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பெயரும் கெட்டுப்போயுள்ளது. கரூரின் பெருமையைச் சீர்குலைக்கும் ‘கரூர் குரூப்’ வசூல் கலாச்சாரத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!
    Next Article முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    February 25, 2026

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    February 25, 2026

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் பேசிய சோனியா காந்தி?. தொகுதி பஞ்சாயத்து ஓவர்!.

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் செந்தில் பாலாஜி திருந்தவில்லை!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026

    கே.என்.நேரு மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்!

    February 25, 2026

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.