Close Menu
    What's Hot

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
    தமிழ்நாடு

    2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

    Editor web1By Editor web1June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 03 at 11.14.59 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரு வேறு இடங்களில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த மணி என்ற கூலி தொழிலாளி சிறுமியை காவல் நிலையம் அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில் சிறுமிக்கு மணி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதையடுத்து அவர்கள் மணியை தேடி உள்ளனர். அவர் கிடைக்காத சூழ்நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலையில் மணியை கண்டுபிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதேபோல் குமாரபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு அவரது உறவினரின் மூன்றரை வயது  பெண் குழந்தை சென்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு உடலில் தொந்தரவு இருந்ததையடுத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் ரீதியாக குழந்தை துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணையில், வரதராஜ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதனிடையே கைதானவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, காவல்நிலையம் முன்பு திரண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரசத்தில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎல்லா சாமானியனும் தனி விமானத்தில் பயணிக்க முடியுமா? – முதலமைச்சருக்கு கொங்கு ஈஸ்வரன் கேள்வி.
    Next Article டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்
    Editor web1
    • Website

    Related Posts

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    June 3, 2026

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    June 3, 2026

    சொத்து விவரத்தை மறைத்தாரா எடப்பாடி பழனிசாமி? வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    சொத்து விவரத்தை மறைத்தாரா எடப்பாடி பழனிசாமி? வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.