Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போடிநாயக்கனூரில் சூறைக்காற்றுக்கு சாய்ந்த 500 கிலோ சிக்னல் கம்பம்: போக்குவரத்து பாதிப்பு!
    தமிழ்நாடு

    போடிநாயக்கனூரில் சூறைக்காற்றுக்கு சாய்ந்த 500 கிலோ சிக்னல் கம்பம்: போக்குவரத்து பாதிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் 500 கிலோ எடையுள்ள சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா கம்பம் சாய்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் இந்த இரும்பு கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அலட்சியப்படுத்தப்பட்ட கோரிக்கைகள்:

    போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பரபரப்பான தேவர் சிலை பகுதியில், போக்குவரத்தை சீர் செய்யவும், சம்பவங்களைக் கண்காணிக்கவும் சுமார் 30 அடி உயரமும், 500 கிலோ எடையும் கொண்ட இந்த இரும்பு கம்பம் நிறுவப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில காலமாக சிக்னல் விளக்குகள் மற்றும் கேமராக்கள் பழுதடைந்து செயல்படாமல் இருந்துள்ளன. இதை சீர் செய்ய வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    விபத்தின் பின்னணி:

    சிக்னல் கம்பத்தின் அடித்தளப் பகுதி துருப்பிடித்து சேதமடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில், போடிநாயக்கனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    நடுரோட்டில் சாய்ந்த கம்பம்:

    நேற்று இரவு எட்டு மணியளவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்திருந்த வேளையில், பலத்த சூறைக்காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக 500 கிலோ எடையுள்ள சிக்னல் கம்பம் சாய்ந்து நடு ரோட்டில் விழுந்தது. இதில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் முகப்புப் பகுதி சேதம் அடைந்தது.

    அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்புரைச் சேர்ந்த லோகேஸ்வரி என்ற பெண்மணி, சிக்னல் கம்பத்தில் இருந்த விளம்பர போர்டின் மின் இணைப்பு வயர் பட்டு, மின்சாரம் தாக்கிய நிலையில் அதிர்ச்சியும், லேசான காயமும் அடைந்தார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    மக்கள் கோரிக்கை:

    அதிர்ஷ்டவசமாக, தேவர் சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிமெண்ட் தளம் சேதமடையவில்லை. உடனடியாக அங்கு கூடிய அப்பகுதியினர், சேதமடைந்த சிக்னல் கம்பத்தை கட்டிங் இயந்திரம் மூலம் அறுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    ஏற்கனவே பலமுறை பயன்படாத நிலையில் உள்ள சிக்னல் மற்றும் கேமரா கம்பத்தை சீரமைக்கவோ அல்லது அகற்றவோ பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அருகில் பயனற்ற நிலையில் உள்ள மற்றொரு சிக்னல் கம்பத்தையும், காவல் துறையினர் கூண்டையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Heavy wind Signal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநகர போக்குவரத்துக் கழகத்தில் பாலியல் புகார் குழு சீரமைப்பு.. கூடுதல் உறுப்பினர்கள் நியமனம்!
    Next Article காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம், உடனடி நடவடிக்கை கோரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.