நாளை நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆயத்த பணிகளில் டெல்லியில் இருப்பதால் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version