Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரீகத்தை சிதைக்கின்றனர்! ஆளுநர் ரவி கடும் விமர்சனம்!
    தமிழ்நாடு

    கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரீகத்தை சிதைக்கின்றனர்! ஆளுநர் ரவி கடும் விமர்சனம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gov 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிசத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்தையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

    எம்.எல்.ராஜா எழுதிய ‘கலியுக கல்வெட்டு’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நான் மாணவ பருவத்தில் இருந்த போது வீட்டில் பெரியவர்கள் சொல்லும் கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால், அதே கதையை ஊரில் உள்ள சிலர் கூறும் போது, அது முரணாக இருந்தது. அதே கதையை புத்தகத்தில் படித்த போது, அது வேறு மாதிரியான அர்த்தத்தை கற்பித்தது.

    அப்போது தான், அதில் முழுமையான உண்மை இருக்கிறதா? என்று சந்தேகம் எழுந்தது. ஒரு உதாரணத்தை சொல்கிறேன். ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போதைய புத்தகங்கள் கூட என்ன சொல்கின்றன? பிரிட்டிஷ்காரர்கள் சிறப்பான ஆட்சியை தந்ததாக அவற்றில் கூறப்பட்டிருக்கின்றன.

    சுதந்திரம் அடைந்த போது மகாத்மா காந்தியிடம் ஒரு பத்திரிகையாளர், “ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? அது தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதே..” என்று கேட்டுள்ளார். அதற்கு காந்தி, “ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் இருந்து சென்று விட்டார்கள். ஆனால், அவர்களின் மனநிலை நம் நாட்டில் இருந்து கொண்டே இருக்கும்” என கூறியிருக்கிறார்.

    அது உண்மையும் கூட. சுதந்திரத்திற்கு பிறகும், ஆங்கிலேயர்களின் பிரதிநிதிகள் தான் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தான் தேவை எனக் கூறியிருக்கிறார். ஏனென்றால், இந்தியா ஒரு அடக்குமுறை கொண்ட நாடாக இருக்கிறதாம். இந்தியர்கள் பசுவையும், குரங்கையும் வழிபடுவதால், ஏகாதிபத்தியம் அவர்களுக்கு தேவை என கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.

    அதே போல, கார்ல் மார்க்ஸை பின்பற்றக் கூடிய நபர்கள், இந்தியாவின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியா தற்போது விழித்துக் கொண்டு விட்டது.

    இன்றைய இளைஞர்கள் தங்களுடைய இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இன்றளவும் கலியுகம் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், கல்லூரி புத்தகங்களில் அது ஒரு புனைவு கதையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. 900 கல்வெட்டுகள் நம்முடைய பாரத நாட்டையும் தாண்டி பல இடங்களில் கிடைத்துள்ளன. அவை தான் நம் வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய வரலாற்றை தேடி ஆய்வு செய்ய வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நவ.30-ல் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்
    Next Article ’AK64’ படப்பிடிப்பு எப்போது? – இயக்குநர் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.