Close Menu
    What's Hot

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பறிபோகும் கோயில் சொத்துகள்.. பதறிப்போய் ஒரு வழக்கு..
    தமிழ்நாடு

    பறிபோகும் கோயில் சொத்துகள்.. பதறிப்போய் ஒரு வழக்கு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil Daily News Paper 7319713830948
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மேட்டு அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” புதுக்கோட்டை கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில் பெரும்பாலானவை முறையாக பராமரிக்கப்படவில்லை. பல ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் கோவிலுக்கே வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் கோவில்களுக்கான சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுவதையும் அதிலிருந்து வருவாய் கிடைக்க வழி வகை செய்து கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். அதோடு வருவாய்ட்ட் கிடைக்கப்பெறும் முறைகளிலும், அதன் செலவீனங்களிலும் வெளிப்படை தன்மை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் புதுக்கோட்டை கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக பராமரிக்கவும், கோவில் புறம்போக்கு நிலங்களை முறையாக பாதுகாப்பதோடு, கோவிலின் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமர்வு, “இந்து சமய அறநிலையத்துறை விதிகள் படி கோவிலுக்கு சொந்தமான நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட வேண்டும். அவை கோவிலின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தவறுகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி மனுதாரரின் மனு குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பின் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்: வரலாற்று சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!
    Next Article என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கோரும் ஆதவ் அர்ஜுனா
    Editor TN Talks

    Related Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.