இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகளே காரணம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக அரசு வெளியுறவுக் கொள்கையிலும் ஒரு #FailureModel ஆகத் திகழ்வதாகக் குற்றம் சாட்டியுள்ள முதல்வர், அரசின் தொலைநோக்கற்ற பார்வையால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியிருப்பதாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version