தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரம்மாண்ட ரோடு ஷோ  மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.  இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வேப்பமூடு சந்திப்புக்குச் சென்று, மாலை 4.30 மணி அளவில் தனது ரோடு ஷோவை முறைப்படி தொடங்குகிறார்.  5.30 மணி வரை வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோ செல்ல உள்ளார்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார். ரோட் ஷோ முடிந்த பிறகு, மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்படுகிறார்.

இந்த ரோடு ஷோ, வேப்பமூடு காமராஜர் சிலையில் தொடங்கி மணிமேடை, அண்ணா சிலை வழியாக வடசேரி எம்.ஜி.ஆர் சிலை சந்திப்பு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது. இதற்காகத் திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி வீதி உலா வரப் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் நகரம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version