Close Menu
    What's Hot

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mduu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் எனும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
    மேலும், காவல் துறைக்கு இணையாக சி.ஐ.எஸ்.எப். செயல்பட முடியாது என்றும் தமிழ்நாடு அரசு கூறியது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. தனிநீதிபதி சுவாமிநாதன் நேற்று நடந்த மோதல் காட்சிகளை பார்த்தாரா என தெரியவில்லை என்றும் அரசு தெரிவித்தது.
    பின்னர் வாதிட்ட தர்கா தரப்பினர், கோயில் நிர்வாகத்தை தவிர்த்துவிட்டு மனுதாரர் தீபம் ஏற்ற செல்வதை ஏற்க முடியாது என்று கூறினர்.மேலும், அது தீபத்தூண் இல்லை, வெளிச்சம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தூண் என்றும் தர்கா தரப்பு வாதிட்டது.
    இதேபோன்று, வழக்கத்தில் உள்ள நடைமுறைக்கு எதிராக நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு இருப்பதாக அறநிலையத் துறை தெரிவித்தது.மேலும், 100 ஆண்டுகளாக தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை என்பதை நீதிபதி சுவாமிநாதனே ஏற்றுக்கொண்டார் என்றும் அறநிலையத்துறை சுட்டிக்காட்டியது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
    உள்நோக்கத்துடன் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை என்றும் தெரிவித்தனர். தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவரே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்தனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு லட்சம் கோடி செலவில் சீனாவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மையம் !!!
    Next Article திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டம்.. நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது!
    Editor TN Talks

    Related Posts

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    June 1, 2026

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    June 1, 2026

    கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.