இரண்டாவது நாளாக இன்றும் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் அந்த அடிப்படையில் முதல் நாளான நேற்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி புத்தாக பயிற்சி தொடங்கி வைத்தார்.

நேற்று காலை 10 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் மூத்த அதிகாரிகள் சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் இன்று காலை 10 மணி முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது இன்று நடைபெறும் பயிற்சியில் நிர்வாக செயல்பாடுகள் சட்டப்பேரவை கேள்வி நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து எல்லாம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் புத்தாக்கப் பயிற்சி பங்கேற்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version