அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று தேனி பெரியகுளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், என் டி ஏ கூட்டணியில் இணை நான் ரெடி, என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ள அண்ணன் எடப்பாடி தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். தன்னை எப்படியாவது கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் சுமார் 2,000 பேர் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது ஓபிஎஸ்க்கு கட்சியில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்த்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version