Close Menu
    What's Hot

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயர் தவிர்ப்பட்டது ஏன்?: சீமான்
    தமிழ்நாடு

    அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயர் தவிர்ப்பட்டது ஏன்?: சீமான்

    Editor web1By Editor web1December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Seeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசுப் போக்குவரத்து கழகங்களில் தவிர்க்கப்பட்ட ‘தமிழ்நாடு’ பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், ‘தமிழ்நாடு’ பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலங்களில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்றே அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதி காப்பது ஏன்? என்று சீமான் தெரிவித்தள்ளார்.  இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்றும் இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு என்ற பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்ததாக சீமான் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப் பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா? என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று முழுமையாக எழுத வேண்டுமென்று அவர் வலியுறுத்தி உள்ளார்.  இல்லையென்றால், ‘தமிழ்நாடு’ பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!
    Next Article அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு… அன்புமணி பாய்ச்சல்
    Editor web1
    • Website

    Related Posts

    தள்ளிப்போகும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!. என்ன காரணம்?

    December 23, 2025

    திமுக விருப்ப மனு விநியோகம் எப்போது?. வெளியான அப்டேட்!

    December 23, 2025

    முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    தள்ளிப்போகும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!. என்ன காரணம்?

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி

    December 23, 2025

    இந்தியாவில் ஆன்லைன் விசா முறையை அறிமுகப்படுத்திய சீனா!.

    December 23, 2025

    26-ம் தேதி தலைமைச் செயலாளர்கள் மாநாடு! மோடி தலைமையில் ஆலோசனை

    December 23, 2025

    பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை முதல் அரையாண்டு விடுமுறை

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.