கூடலூர் அருகே வீட்டு வாசலில் வேலை பார்த்த பெண்ணை காட்டு யானை  தாக்க முயன்ற நிகழ்வின் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்பொழுது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் குடியிருப்புகளுக்குள்ளும் யானைகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூடலுரை அடுத்துள்ள புளியம்பாறை அருகில் உள்ள கொல்லூர் பகுதியில் வசிப்பவர் சாந்தகுமாரி. இவரது வீட்டிற்கு வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், தனது வீட்டை பராமரிப்பதற்காக சாலையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்களை வீட்டு முன் கொட்டுவதற்காக எடுத்து வந்துள்ளார்.

அப்போது சாலையில் நடந்து வந்த யானை சாந்தகுமாரியை பார்த்ததும் தாக்குவதற்காக வேகமாக வந்தது. இதனை அறிந்து கொண்ட சாந்தகுமாரி சாக்கு பைகளை வீசிவிட்டு பள்ளமான இடத்திற்கு சென்று உயிர்த்தப்பினார்.

எனினும் அந்த யானை கட்டுமானப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்ட பகுதியில் நின்றபடி நோட்டமிட்டது. சாந்தகுமாரி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய அந்த CCTV காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version