Close Menu
    What's Hot

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    தொடர் போராட்டத்தால் பதற்றத்தில் தலைநகர் டெல்லி..! தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..! தலைமை நீதிபதி எச்சரிக்கை..!

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகளிர் உதவித்தொகை.. 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…
    தமிழ்நாடு

    மகளிர் உதவித்தொகை.. 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    18 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த பல திட்டங்களில் மக்களை குறிப்பாக பெண்களை பெரிதும் கவர்ந்த திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். வேலைக்கு செல்லாமல் வீட்டு வெலைகளை மட்டும் செய்து வரும் பெண்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். அதன்படி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.12,000கோடி ஒதுக்கப்பட்டது.

    தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது தேர்ந்தெடுக்கப்படும் மகளிருக்கு எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போது வரை 1கோடியே 14 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில், பலரும் தங்களுக்கும் உரிமைத் தொகை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    17 4

    தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, புதிதாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். வழக்கம்போல் ஆன்லைனில் விண்ணப்பிக்காமல் நேரடியாகவே விண்ணப்பங்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி மக்களிடம் முதல்வர் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.

    அப்போது புதிதாக மகளிர் உரிமை கேட்பவர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்… ஜான் ஜெபராஜ் ஆதராவளர் கைது…
    Next Article செம்பரம்பாக்கம் விவகாரம்: தமிழக அரசை கண்டித்த பசுமைத் தீர்ப்பாயம்…
    Editor TN Talks

    Related Posts

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    July 23, 2026

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    July 23, 2026

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    தொடர் போராட்டத்தால் பதற்றத்தில் தலைநகர் டெல்லி..! தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..! தலைமை நீதிபதி எச்சரிக்கை..!

    தூத்துக்குடி; இளைஞர் அருணாசலம் மரணம்… என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்!

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.