பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நம்பெருமான் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில், விழாவின் 8-ம் நாளான இன்று, காலை நம்பெருமாள், கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ரங்கவிலாச மண்டபத்தை அடைந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6.30 மணியளவில் ரெங்கவிலாச மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை அடைகிறார்.

இன்று காலையில் நடைபெற்ற வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version