Author: Editor TN Talks
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில், மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஜனநாயகம் இந்த உலகுக்கே ஒரு சொத்து எனலாம். அப்படியிருக்க இந்திய ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல் சர்வதேச ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். பாஜக அடிப்படையில் என்ன செய்ய விழைகிறது என்றால், இந்திய அரசமைப்பை முற்றிலுமாக அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தை அழிக்க நினைக்கிறது. மொழிகள், மதங்களுக்கு இடையேயான சமத்துவத்தை ஒழிக்க நினைக்கிறது; இந்திய அரசமைப்பின் மையப் புள்ளியை சிதைக்க நினைக்கிறது. ஜனநாயக அமைப்பின்…
சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘45’. இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கியுள்ள இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஜன.1-ம் தேதி வெளியாகிறது. சுராஜ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. நடிகர் விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சிவராஜ்குமார் பேசும்போது, “அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டரையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகி இருக்கிறார். விரைவில் நடிகராக ஆகிவிடுவார். உபேந்திராவுக்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர் தான் எனக்கு பிரேக் தந்தார். அவர் அட்டகாசமான கலைஞர். ராஜ் பி ஷெட்டி சமீபமாகக் கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேர் கெமிஸ்ட்ரியும்…
ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை துபாயில் நடைபெற்றது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பேபி சஹானா ரவி, நிதிஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றிருந்தனர். பேபி சஹானா ரவி 23 வயதுக்குட்பட்ட மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பிலிப்பைன்சை சேர்ந்த மங்கின்சே லெனி மேரியை 6-11, 11-5, 11-8, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். நிதிஷ் 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மயிலாப்பூர் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேபி சஹானா, நிதிஷ் ஆகியோரை பாராட்டினார். பயிற்சியாளர்கள்…
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 187 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்பல்பூரில் நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடுதளத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர். தேர்வர்கள் வெட்ட வெளியில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியது. மேலும் 5-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட இந்தப் பணிக்கு தினசரி படியாக ரூ.639 வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் எம்பிஏ, எம்சிஏ என முதுநிலை பட்டம் பெற்றவர்களும் பங்கேற்றனர். இது வேலையின்மையின் தீவிரத்தை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஃபிபா தரவரிசையில் 2025-ம் ஆண்டை ஸ்பெயின் அணி முதலிடத்துடன் நிறைவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றம் இல்லை. ஸ்பெயின் அணி 1877.18 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. அர்ஜெண்டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்சுகல் (1760.38), நெதர்லாந்து (1756.27), பெல்ஜியம் (1730.71), ஜெர்மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன. இந்தியா 1079.52 புள்ளிகளுடன் 142-வது இடத்தில் உள்ளது. அடுத்த தரவரிசை பட்டியலில் வரும் ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்படும் எனவும் ஃபிபா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது. இதனால் உக்ரைன் ராணுவத்துக்கு வர்த்தக ரீதியில் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் செயற்கைகோள்களை தாக்குவோம் என ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். கீழடுக்கு சுற்று வட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது தாக்குல் நடத்த எஸ்-500 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் கூறியது. விண்ணில் செயல் இழந்த செயற்கைக்கோள் மீது ஏவுகணையை வீசி தகர்க்கும் சோதனையை கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யா செய்தது. இந்நிலையில் ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்கள் மீது தாக்குதல் நடத்த வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கூரான இரும்பு துண்டுகளை ஆயுதமாக பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக நேட்டோ உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இந்த இரும்பு துண்டுகளை சிறிய செயற்கைக் கோளில்…
எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வினோத்குமார் என அறிமுகம் செய்து கொண்டு, `முதல்வர் ஸ்டாலின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ எனக்கூறி இணைப்பைத் துண்டித்தார். இதையடுத்து, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடைபெற்றது. சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் கிடைக்காததால் புரளியைக் கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸார் மிரட்டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், “என் பெயர் வினோத்குமார். நான் தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருக்கிறேன். அடையாளம் தெரியாத இருவர் என்னை பலமாக தாக்கினர். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் போலீஸார் வரவில்லை.…
கிறிஸ்துமஸையொட்டி, சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 255 பேருந்துகளும், நாளை 525 பேருந்துகளும் இயக்கப்படவிருக்கின்றன. இன்றும், நாளையும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மொத்தம் 91 சிறப்புப் பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நாளை முதல் 28-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 24, 25-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் இன்று முதல் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும். நீலகிரி…
புயல், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? திமுகவின் வாக்குத் திருட்டுக்கு அப்பாவி உழவர்களுக்கு துரோகம் செய்வதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அரசின் பல்வேறு ஆதாரங்களில் இருந்த நிதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக செலவிடப்பட்டதால் தான் உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும்…