Author: Editor TN Talks
சென்னைக்கு தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள டித்வா புயல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்பகுதியை நாளை அதிகாலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இலங்கையின் கடலோர பகுதியிலும், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும் உருவான டித்வா புயல், கடந்த 6 மணி நேரத்தில் 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. காலை 5.30 மணி நிலவரப்படி இந்த புயல், இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், காரைக்காலுக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.…
மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. குறிப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை. போக்குவரத்து எங்கும் தடைபடவில்லை. 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 24 குடிசைகள் இடிந்து விழுந்துள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. டித்வா புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டியே செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும், நாளையும் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செல்பி எடுப்பதாக கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம். படகு, பயிர் சேதங்களை கணக்கிடும் பணிகள் நவம்பர் 30-க்கு…
ஈரோட்டில் டிச.20-ல் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸில் இணைய உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமாகாவின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜி.கே.வாசன் கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் ஆசியோடு, தமிழ் மாநில காங்கிரஸ் 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காந்திய வழியில் கட்சியை நடத்தும் காமராஜர் மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், தனது இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் இணைக்க உள்ளார். ஈரோட்டில் டிச.20-ம் தேதி நடைபெறும் விழாவில், காமராஜர் மக்கள் இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் இணைக்கிறார். நல்லவர்கள், ஊழல் அற்றவர்கள், வெளிப்படை தன்மையோடு செயல்படுபவர்களின் துணை அனைவருக்கும் தேவை. நல்லாட்சி, தூய்மையான ஆட்சிக்கு இதுபோன்ற இணைவு அவசியம். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக…
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புரட்சிகரமான பல்வேறு திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழக மக்களுக்காகப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு அதிமுகவினரின் இன்றியமையாத கடமையாகும். அந்த வகையில் 9-வது ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட நுழைவாயிலின் உள் பகுதியில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது…
டித்வா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.29) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டித்வா புயலால் புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை கல்வியமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட உத்தரவில், ‘டித்வா புயல் காரணமாக அதிக கனமழை பொழியும் என்பதால் இன்று (நவ.29) புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானமும், புதுவையில் இருந்து பெங்களூரு சென்று வரும் விமானமும், புதுவையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிறுத்தைக்கு வைத்த கூண்டில் குடிபோதையில் மனிதர் ஒருவர் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடார்னியாகாட்டில் சரணாலயம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி சிறுத்தை, புலிகள் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று தின்னும் சம்பவம் நடந்து வந்தது. கடந்த 26-ம் தேதி இரவு கடார்னியாட் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் புகுந்த சிறுத்தை 55 வயதான சாந்திதேவி என்ற பெண்ணை அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இரும்புக்கூண்டை வைத்து சிறுத்தையைப் பிடிக்க ஏற்பாடு செய்தனர். கூண்டுக்குள் ஆடு கட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, அந்த இரும்புக் கூண்டுக்குள் பிரதீப் என்பவர் அடைபட்டுக் கிடந்தார். வனத்துறை அதிகாரிகள் கூண்டுக்குள் இருந்து அவரை மீட்டனர். பின்னர் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இரும்புக்கூண்டில் சிக்கியது தெரியவந்தது. இரும்புக்கூண்டுக்குள் யார் நுழைந்தாலும் உடனடியாக கூண்டுக்கதவுகள் தானியங்கியாக மூடிவிடும். ஆனால், கூண்டில்…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், (எஸ்ஐஆர்) வந்தே மாதரம் பாடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என அதிகாரிகள் கூறினர். மேலும் அணு சக்தி, உயர் கல்வி, கார்ப்பரேட் சட்டம் மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாக 10 முக்கிய மசோதாக்களை குளிர்கால கூட்டத்தில் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டள்ளது.…
திமுக பாணியை பின்பற்றி கட்சியை வலுப்படுத்தும் பணியில் பாஜக இளைஞரணி தீவிரமாகி இருக்கிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் பாஜக இளைஞரணியினர் முன்களப்பணியாளர்களாக செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டு செயலாற்ற ஆரம்பித்திருக்கிறது தமிழக பாஜக. அதன்படி அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பெருங்கோட்டம் வாரியாக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு இளைஞரணியினரை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தி வருகிறார். தற்போது திருச்சி பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட 11 மாவட்டங் களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூர்யாவுக்கு, 8 பெருங்கோட்ட கூட்டங்களை டிச.10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டம் தரப்பட்டுள்ளது. அதன் பின்னர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட ஏழு பெருங்கோட்டங்களிலும் இரண்டாம் நிலை கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. தேர்தலுக்கான இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்து பாஜக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “பாஜகவை வலுப்படுத்தும் விதமாக இளைஞரணியை வளர்த்தெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு இளைஞரணி தலைவர், துணைத்தலைவர் உட்பட 33 பேருக்கு…
குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் அவர்கள் பார்க்கும் விஷயங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, தொலைக்காட்சியில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நிகழும் என்பது குழந்தைகளின் நம்பிக்கை. அதனால், விளம்பரத்தில் வரும் பல பொருட்களை வாங்கி கொடுக்க சொல்லியும், அதில் வருவதை போலவும் நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான், டூத் பேஸ்ட் (பற்பசை) பற்றிய விளம்பரங்கள். இந்த விளம்பரங்களில், டூத் பேஸ்ட் முழுவதும் பேஸ்ட்டை நிரப்பி பல் துலக்குவார்கள். இதனை பார்த்து குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அதையே பின்பற்றுகிறோம். நிறைய பேஸ்ட் வைத்து தேய்த்தால் பல் பளபளப்பாகும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், உண்மையில் பல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வளவு பேஸ்ட் அவசியம் என நீங்கள் யோசித்தது உண்டா? உண்மையில், நாம் எவ்வளவு டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பது நமது வயது மற்றும் பற்களின் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்து என்கிறார்…
அன்புமணியால் பாமக-வுக்கு ஏற்பட்ட சரிவை 2026-ல் ராமதாஸ் சரிசெய்வார் என பாமக (ராமதாஸ்) இணைப் பொதுச்செயலாளர் சேலம் அருள் எம்எல்ஏ தெரிவித்தார். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி, சேலம் மாவட்டத்தில் பாமக (ராமதாஸ்) சார்பில் டிசம்பர் 12-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேட்டூரை அடுத்த மேச்சேரியில் சேலம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் அருள் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாமக தலைவர், நிறுவனர் ராமதாஸ் தான். அப்படி இருக்கையில் அவர் புதியதாக கட்சி ஆரம்பிக்க அவசியமில்லை. பிஹாரில் போட்டியிடத் தான் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தமிழகத்தில் எங்களுக்கே மாம்பழம் சின்னம் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி தேர்தல் கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போகாத ஊருக்கு வழி சொல்வது போல, அன்புமணி தரப்பு இடஒதுக்கீட்டுக்கான ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். பாஜக,…