Author: Editor TN Talks

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், அன்று சாமியை தரிசனம் செய்ய முடியாத பட்சத்தில் மறுநாள் முருகனை தரிசிப்பதற்காக கோயில் கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கடற்கரை பகுதியில் தங்குபவர்களிடம் திருட்டு போன்ற குற்றச் சம்பவம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பை…

Read More

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்ப வைத்து விட்டதாக, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் மரணம் அடைந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, வழக்கு கோப்புகளை மாநில…

Read More

பிரபு சாலமன் இயக்​கத்​தில் புது​முகம் மதி ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘கும்கி 2’. ஷ்ரிதா ராவ், ஆன்ட்​ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். முக்​கிய கதா​பாத்​திரத்​தில் அர்​ஜுன் தாஸ் நடித்​துள்​ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்​ளார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இதை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்​டர்​டெய்ன்​மென்ட்ஸ் சார்​பில் ஜெயந்​திலால் காடா, தவல் காடா தயாரித்​துள்​ளனர். இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் பிரபு சாலமன் கூறும்​போது, “இப்​படத்​துக்​காக நாங்​கள் கடந்து வந்த பாதைகள் அதி​கம். நெல்​லையம்​பதி என்ற இடத்​தில் படப்​பிடிப்​புக்​காகக் காட்​டுக்​குள் ஜீப்​பில் செல்ல 4 முதல் 5 மணி நேர​மாகும். மின்​சா​ரம் இல்​லாமல், மொபைல் நெட்​வொர்க் இல்​லாமல்தான் படப்​பிடிப்பு நடத்​தினோம். பழைய பிரிட்​டிஷ் விருந்​தினர் வீடு. கடுமை​யான குளிரில் மொத்​தப் படக்​குழு​வினரும் சிரமப்​பட்​டார்​கள். 2018-ல் தொடங்​கி, 2019-ல் படத்தை முடித்​து​விட்டு டிசம்​பரில் போட்​டுக் காட்​டினோம். பிறகு கரோனா அனைத்​தை​யும் புரட்​டிப் போட்​டு​விட்​டது. த​யாரிப்​பாள​ருக்கு…

Read More

செங்​கோட்​டையன் விவ​காரத்​தி​லும் திமுக பின்​னணி​யில் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யம் அருகே தொட்​டி​பாளை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக கூறிய பிறகே, அதி​முகவை ஒருங்கிணைப்​பது தொடர்​பாக பல்​வேறு விஷ​யங்​களை தான் முன்​னெடுத்​த​தாக செங்​கோட்​டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் அதி​முகவை ஒன்​றிணைக்​கச் சென்​றோம் என்​றும் தெரி​வித்​துள்​ளார். அந்த 6 போ் யார் என்று தெரிய​வில்​லை. பாஜக​வில் யாரிடம் சென்று கூறி​னார்​கள் என்​ப​தை​யும் செங்​கோட்​டையன் கூற​வில்​லை. எனவே, இதுகுறித்து நான் கருத்து கூறி​னால் தவறாகப் போய்​விடும். ஏற்​கெனவே மனோஜ் பாண்​டியன் திமுக​வில் இணைந்​துள்​ளார். எனவே, செங்​கோட்​டையன் விவ​காரத்​தின் பின்​னணி​யிலும் திமுக இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது. கோவை இளம்​பெண் கூட்டு பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது…

Read More

சென்னையில் உள்ள 20 வெளி​நாட்டு துணை தூதரகங்​களுக்​கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. நாடு முழு​வதும் கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரைப் பிரபலங்​கள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உட்பட பலவற்​றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள இலங்​கை, கிண்​டி​யில் உள்ள பிலிப்​பைன்​ஸ்,ராயப்​பேட்​டை​யில் உள்ள ஆஸ்​திரேலி​யா, நந்​தனத்​தில் உள்ள தாய்​லாந்து உள்​ளிட்ட நாடுகளின் 20 துணைத் தூதரகங்​களில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டுள்​ளது என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. பின்​னர் உயர் போலீஸ் அதி​காரி​களின் அறி​வுறுத்​தலை ​அடுத்​து, போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் விரைந்து வெடிகுண்டு மிரட்​டலுக்கு உள்​ளான இடங்​களில் சோதனை நடத்​தினர். பல மணி நேர சோதனைக்​குப் பிறகு…

Read More

‘ஆர்​.ஆர்​.ஆர்’ படத்​தின் பிரம்​மாண்ட வெற்​றிக்​குப் பிறகு மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார், இயக்​குநர் ராஜமவுலி. இதில் வில்​ல​னாக நடிக்​கும் பிருத்​வி​ராஜின் முதல் தோற்ற போஸ்​டரை ராஜமவுலி வெளி​யிட்​டுள்​ளார். அவர் ‘கும்​பா’ என்ற கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். இதுபற்றி ராஜமவுலி வெளி​யிட்​டுள்ள பதி​வில், ” பிருத்​வி​ராஜுடன் முதல் ‘ஷாட்​’டை எடுத்த பிறகு, நான் பார்த்​த​திலேயே மிகச்​சிறந்த நடிகர் நீங்​கள்​தான் எனச் சொன்​னேன். இந்​தக் கொடுமை​யான, இரக்​கமற்ற, சக்​தி​வாய்ந்த எதிரி​யான ‘கும்​பா’வுக்கு உயிர் கொடுத்​தது திருப்​தி​கர​மாக இருந்​தது. இப்​படத்​தில் இணைந்​ததற்கு நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளார்​. இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழா ஐதரா​பாத்​தில் நவ.15-ம் தேதி நடை​பெற இருக்​கிறது.

Read More

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள படம் ‘பிரம்மயுகம்’. கேரள நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில், கருப்பு – வெள்ளையில் இப்படம் எடுக்கப்பட்டது. இதில் கொடுமோன் போட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மம்மூட்டி. கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மம்மூட்டியின் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதேபோல சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை அவர் சமீபத்தில் பெற்றார். இந்நிலையில் இப்படம் ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்பட இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், அடுத்த ஆண்டு பிப்.12-ம்தேதி திரையிடப்படும். இதில் பங்கேற்கும் ஒரே இந்தியப் படம் இது. இதை நடிகர் மம்மூட்டி, தன துசமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read More

சேரன், நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் நவீனத் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு நவ.14-ம் தேதி வெளியாகிறது. படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராஃப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இதில் சினேகா, இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாண்டிராஜ், ஜெகன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் சேரன் பேசும்போது, “21 வருடங்களுக்குப் பிறகு ‘ஆட்டோகிராஃப்’ படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என் வெற்றியாகப் பார்க்கிறேன். அப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தைக்…

Read More

நான்கு வழிச் சாலையில் பைக் மற்றும் எலெக்டிரிக் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். கிணத்துக்கடவை அடுத்த கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (56) – ஜோதி (46). முருகேசன் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்த தம்பதியருக்கு சந்தியா (25) என்ற மகள் உள்ளனர். சந்தியாவுக்கு சந்தோஷ் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் 5 பேரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக முருகேசன் – ஜோதி தம்பதி, மகள் சந்தியா அவரது இரண்டு குழந்தைகளுடன் கோவில்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனர். 5 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதே பாதையில் எதிரே காமராஜர்புரம், கிருஷ்ணசாமி சாலையில் வசிக்கும் துரைராஜ் (60) எலெக்ட்ரிக் காரில் வந்து…

Read More