Author: Editor TN Talks

பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது என்றும், 65.08% வாக்காளர்கள் முதல்கட்ட தேர்தலில் பங்கேற்றுள்ளதாகவும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார். சுபாலில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் பிஹாரில் என்ன நடக்கப் போகிறது என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறுகின்றனர். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றில் பிஹாரில் அதிக வாக்குப்பதிவு நடக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது. ஜன் சுராஜ் கட்சி பிஹார் அரசியலில் முதன்முதலில் கால் பதிக்கிறது. தற்போதுள்ள அரசியல் அமைப்புக்கு ஓர் உண்மையான மாற்றாக எங்கள் கட்சி விளங்குகிறது. 30 ஆண்டுகளாக ஒரே அரசியலை பார்த்த வாக்காளர்கள் மாற்றத்தைத் தேடுகிறார்கள். பிரதமருக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், ஆர்ஜேடி…

Read More

சென்னை திருவான்மையூர், ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசு மற்றும் SCOO NEWS நிறுவனம் இணைந்து நடத்திய புதிய இந்திய கல்வி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் SCOO NEWS நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் ரவி சாண்ட்லனி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமூக நீதிக்கான இடத்துக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். 2022-ல் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அந்த திட்டம் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு உள்ளிட்ட சில பாடங்களை குறிப்பிட்டு செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சில இடங்களில் கவனம் செலுத்தவேண்டும் என சிலர் சொன்னார்கள். எங்களை…

Read More

நடிகர் கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றுள்ளதாகக் கூறி, எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன், நாயகன் படத்தின் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை 2023 ம் ஆண்டு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை மறைத்து V.S.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதால்,…

Read More

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அந்த மையம் தெரிவித்து இருப்பதாவது : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read More

உலக டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் பிரிவு மற்​றும் இரட்​டையர் பிரி​வில் முதல் 8 இடங்​களில் உள்ள வீரர்​கள் கலந்து கொள்​ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்​தாலி​யின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான டிரா நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் ஒற்​றையர் பிரி​வில் கலந்​து​கொள்​ளும் 8 வீரர்​களும் இரு பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். பிஜோர்ன் போர்க் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இந்த பிரி​வில் கடைசி வீர​ராக இடம் பெறு​வ​தில் கனடா​வின் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம், இத்​தாலி​யின் லோரென்சோ முசெட்டி ஆகியோர் இடையே போட்டி நிலவி வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் 8-வது இடத்​தில்…

Read More

எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்த வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார். ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியும் அவரை இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யவில்லை, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்காலை உத்தராகண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெறச் செய்தார். இத்தகைய ஆட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்துள்ளது. அஜித் ஆகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமியின் ‘மேட்ச் ஃபிட்ட்னஸ்’ குறித்த சந்தேகங்களையே காரணமாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. மேட்ச் ஃபிட்னெஸ், மேட்ச் பிராக்டீஸ் போன்ற சொற்றொடர்களெல்லாம் ‘சும்மா பம்மாத்து’ என்பதே ஷமியின் பயிற்சியாளரான முகமது பத்ருதீனின் காட்டமான…

Read More

ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு செய்​துள்​ளது. இதன்​படி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், மும்பை வான்​கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இறு​திப் போட்​டியை உலகின் மிகப்​பெரிய மைதான​மான ஒரு லட்​சம் பேர் அமர்ந்து பார்க்​கக்​கூடிய அகம​தா​பாத் மைதானத்​தில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யும் இதே மைதானத்​தில்​தான் நடத்​தப்​பட்​டது. டி20 உலகக் கோப்பை தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை ஐசிசி அடுத்த வாரம் வெளி​யிடக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அநேக​மாக போட்​டிகள் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி நிறைவடையக்​கூடும். இந்​தத் தொடரில்…

Read More

ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​ விரோத பணப்பரி​மாற்​றம் நடை​பெற்​றது தெரிய​வந்​தது. இதனையடுத்​து, சுரேஷ் ரெய்​னா​வின் ரூ. 6.64 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் (மியூச்​சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத் துறை முடக்கி உள்​ளது. இந்த விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக முன்​னாள் வீரர்​களான யுவ​ராஜ் சிங், ராபின் உத்​தப்பா மற்​றும் நடிகர்​கள் சோனு சூட், ஊர்​வசி ரவுதலா, மிமி சக்​ர​வர்த்தி (முன்​னாள் திரிணா​முல் காங்​கிரஸ் எம்​.பி.) மற்​றும் அங்​குஷ் ஹஸ்ரா (வங்​காள நடிகர்) ஆகியோரிடம் அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யிருந்​தது. இவர்​கள் மீதும் விரை​வில் நடவடிக்கை எடுக்​கப்​படக்​கூடும்​ என தெரி​கிறது.

Read More

​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இருதரப்​புக்​கும் வழங்க பதி​வாள​ருக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றார். அவரது வெற்​றியை எதிர்த்து அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், அதி​கார துஷ்பிரயோகம் மற்​றும் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட அளவுக்கு அதி​க​மாக தேர்​தலுக்கு செலவு செய்​த​தால் ஸ்டா​லி்ன் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என கோரி​யிருந்​தார். அந்த வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்த நிலை​யில், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, முதல்​வர் மு.க.ஸ்​டாலின் தரப்​பில் ஆஜரான மூத்த…

Read More

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலினும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. சந்திப்புக்கு பின் தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சிறப்பைஉணர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தேன். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதன்மை அரசியல் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் இந்த ஆட்சியின் திட்டங்களை ஆதரித்து வருகிறோம். தொடர்ந்து2026 சட்டப்பேரவை தேர்தல் உட்பட எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினோம். அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தோம். ஆனால், இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமி தலைமையிலான அதிமுக சரிவை சந்தித்து…

Read More