Author: Editor TN Talks
ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்ட மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்காக இருப்பதால் தனக்கான வழியைத் தேடிப் புறப்பட்டு திமுகவில் கலந்துவிட்டார். மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் சீட் உறுதி என்று உத்தரவாதம் அளித்துத்தான் அவரை திமுகவுக்கு அழைத்து வந்தாராம் அமைச்சர் சேகர் பாபு. இந்த நிலையில், ஏற்கெனவே ஆலங்குளத்தில் வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியனுக்கு இந்த முறை அந்தத் தொகுதிக்குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசிவைத்திருப்பதாக வந்து விழும் செய்திகள், அம்பாசமுத் திரத்தில் மூன்று முறை தோற்றும் அந்தத் தொகுதிக்காக இன்னமும் காத்திருக்கும் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வகையறாக்களை கொஞ்சம் திகைக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லை மேற்கு மாவட்ட திமுகவினர், “அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் தொடர்ச்சியாக 3 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். மீண்டும் அவரை அங்கு நிறுத்தினால் ஜெயிப்பது சிரமம் என்பதால் தலைமை மனோஜ் பாண்டியனை சாய்ஸாக எடுத்திருக்கலாம். அம்பாசமுத்திரத்தில் நாடார் மற்றும்…
பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் – 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் – எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட்…
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த பெற்றோர்கள் பலர் அந்த ஆசிரியையின் செயலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆசிரியையை ஸ்ரீகாகுளம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஜெகன்னாத் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்த தலைமுடியை மொத்தமாக பெறுவதோடு, வேறு வழிகளிலும் தலைமுடியை பெற்று சில தொழில் அதிபர்கள், அவர்களது நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த தலைமுடி உலகளவில்விக், ஹேர் எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகை அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிகை அலங்காரங்கள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் மனித தலைமுடி பெரும்பாலும் இந்தியாவிலிருந்து செல்வதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, அதிக வருமானம் கிடைப்பதால் தலைமுடி இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு மியான்மர், வங்கதேசம் மற்றும் நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்தப்பட்டு, அங்குள்ள நிறுவனங்கள் இந்த முடியை பயன்படுத்தி விக் தயாரித்து தங்களது பிராண்டுகளின் பெயரில் அவற்றை விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது. அசாம் தலைநகர் குவஹாட்டியை…
முழங்கால் காயம் காரணமாக பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வரும் டிசம்பர் 14-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி 20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்க இருந்தார். இதற்காக 39 வயதான அவர், சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள அஸ்வின், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையும் வகையில் பிக் பாஷ் லீக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
‘உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்’ என, காதலிக்கு பெங்களூரு டாக்டர் மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28. இவருக்கு மயக்க மருந்து செலுத்தி கொன்றதாக, இவரது கணவரான டாக்ட ர் மகேந்திர ரெட்டி 36, கடந்த மாதம் மாரத்தஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர். பல பெண்களுடன் உறவில் இருந்ததைக் கண்டித்த கிருத்திகாவை மகேந்திர ரெட்டி கொலை செய்ததாக, கிருத்திகா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மனைவிக்கு உடல்நல பிரச்னைகள் இருந்ததால் ஏற்பட்ட வெறுப்பில், மயக்க ஊசி செலுத்தி கொன்றதையும், மாமனார் சொத்துகளை அபகரிக்க நாடகமாடியதையும், போலீஸ் விசாரணையில், மகேந்திர ரெட்டி ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, இரண்டு மொபைல் போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். பெரும்பாலான குறுந்தகவலை அனுப்பிய பின் அழித்தது தெரிந்தது. அழித்த தகவல்களை மீட்டெடுக்க, தடயவியல் ஆய்வகத்திற்கு மொபைல் போன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து,…
எஸ்ஐஆர் விவகாரத்தில் தேவையற்ற வேலையைச் செய்யும் பாஜக, பதற்றமாகவே வைத்திருக்க நினைப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த இது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்துவிட்டு சிறையிலிருந்து வந்தவன் பெற்ற தாயை கொலை செய்கிறான். அவனை நீதிமன்றம் தண்டனையை நீக்கி விடுவிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இச்சமூகம் வாழ வாய்ப்பற்று கொடூரமாகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. கோவையில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் நீண்ட நாட்களாக அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. காவல்துறை சுட்டுப் பிடித்தோம் என்கிறார்கள். இதற்கு நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும். ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற நடுக்கம் ஏற்படுகிறது.…
தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சலில் எழுத்துபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், ‘தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரத்தை விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் உள்ளதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல. கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்’ என தேர்தல்…
ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள், பொதுத்தேர்வு மற்றும் பருவமழை கால முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன்பின், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், உரிய காலத்துக்குள் பாடப்பகுதிகளை திட்டமிட்டு நடத்தி முடிக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓய்வுபெற்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உரிய பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். கற்றல் அடைவுத் தேர்வில் பெற்ற மாவட்ட தேர்ச்சி அறிக்கையை ஆய்வு செய்து பின்தங்கிய பள்ளிகள் மீது கவனம் செலுத்தி கற்பித்தலை…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இது தொடர்பாக மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. மத்தியமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஒரு வளிமண்டலகீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.