Close Menu
    What's Hot

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»‘உனக்காக மனைவியை கொன்றேன்’: காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்
    இந்தியா

    ‘உனக்காக மனைவியை கொன்றேன்’: காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்’ என, காதலிக்கு பெங்களூரு டாக்டர் மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28. இவருக்கு மயக்க மருந்து செலுத்தி கொன்றதாக, இவரது கணவரான டாக்ட ர் மகேந்திர ரெட்டி 36, கடந்த மாதம் மாரத்தஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர்.

    பல பெண்களுடன் உறவில் இருந்ததைக் கண்டித்த கிருத்திகாவை மகேந்திர ரெட்டி கொலை செய்ததாக, கிருத்திகா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    மனைவிக்கு உடல்நல பிரச்னைகள் இருந்ததால் ஏற்பட்ட வெறுப்பில், மயக்க ஊசி செலுத்தி கொன்றதையும், மாமனார் சொத்துகளை அபகரிக்க நாடகமாடியதையும், போலீஸ் விசாரணையில், மகேந்திர ரெட்டி ஒப்புக்கொண்டார்.

    இதற்கிடையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, இரண்டு மொபைல் போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். பெரும்பாலான குறுந்தகவலை அனுப்பிய பின் அழித்தது தெரிந்தது.

    அழித்த தகவல்களை மீட்டெடுக்க, தடயவியல் ஆய்வகத்திற்கு மொபைல் போன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து, அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

    கிருத்திகா ரெட்டி இறந்த அன்று, ‘போன்பே மெசேஜ்’ மூலம், இளம்பெண் ஒருவருக்கு மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில், ‘உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் சில பெண்களுக்கு, ‘வாட்ஸாப்’பில் மெசேஜ் அனுப்பியதும் தெரிந்துள்ளது. மகேந்திர ரெட்டியுடன் தொடர்பில் இருந்த பெண்களிடமும் விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    murder#sms#husband
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக…. எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்
    Next Article பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்
    Editor TN Talks

    Related Posts

    அதிரும் டிஜிட்டல் உலகம்!. 24 மணிநேரத்தில் 10 கோடி பார்வைகள்!. மோடியின் ‘ஜால்முரி’ வீடியோ படு வைரல்!

    April 21, 2026

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    April 20, 2026

    கோர விபத்து!. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!. மீட்புப் பணிகள் தீவிரம்!

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    April 21, 2026

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    April 21, 2026

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.