Close Menu
    What's Hot

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக…. எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்
    அரசியல்

    மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக…. எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025Updated:November 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

    இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக் கொலை செய்​து​விட்டு சிறையி​லிருந்து வந்​தவன் பெற்ற தாயை கொலை செய்​கி​றான். அவனை நீதி​மன்​றம் தண்​டனையை நீக்கி விடுவிக்​கிறது. இதையெல்​லாம் பார்க்​கும்​போது இச்​சமூகம் வாழ வாய்ப்​பற்று கொடூர​மாகி​விட்​டதோ எனத் தோன்​றுகிறது.

    கோவை​யில் சம்​பவம் நடை​பெற்ற பகு​தி​யில் நீண்ட நாட்​களாக அதி​க​மாக மது விற்​பனை நடை​பெற்று உள்​ளது. காவல்​துறை சுட்​டுப் பிடித்​தோம் என்​கி​றார்​கள். இதற்கு நாம் அனை​வ​ரும் தலை​குனிய வேண்​டும். ஒரு பாது​காப்​பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்​டிருக்​கி​றோமோ என்ற நடுக்​கம் ஏற்​படு​கிறது. கடும் சட்​டங்​கள் இருந்​தால் தான் இது போன்ற சம்​பவங்​களை தடுத்து நிறுத்த முடி​யும். பொள்​ளாச்​சி​யில், அண்ணா பல்​கலை​யில் என இது​போன்று பாலியல் வன்​புணர்​வு​கள் தொடர்ச்​சி​யாக நடக்​கிறது.அதி​முக குறித்து நான் சொன்​னது விமர்​சனமல்ல உண்​மை​யைச் சொன்​னேன். அதி​முக-​வினர் பேசுவதையெல்​லாம் ஒரு பொது மனித​னாகப் பாருங்​கள். துரோகம், சமூக நீதி, சுயமரி​யாதை குறித்​தெல்​லாம் பேச இவர்​களில் யாருக்​காவது தகுதி இருக்​கிற​தா? நான்​தான் திரா​விடத்​தின் உண்​மை​யான வாரிசு என்று சொல்​லும் போது வெறி வருமா வரா​தா? அதனால்​தான் பேசினேன்.

    ஆரி​யத்தை எதிர்க்க வந்​தது திரா​விடம் என்​கி​றார்​கள். தமி​ழர் என்று வைத்​தால் பிராமணர்​கள் ‘நானும் தமி​ழன்’ என்று உள்ளே வந்து விடு​வார்​கள் என்று பெரி​யார் தொட்​டு, வீரமணி வரை பேசி வரு​கின்​ற​னர். அதே கருத்தை தான் அதி​முக-​வினர் பேசுகி​றார்​கள். திரா​விடம் என்று இருக்​கும்​போது ஜெயலலி​தா​வின் தலை​மையை திரா​விடத் தலை​வர்​கள் எப்​படி ஏற்​றார்​கள்?

    ஆரி​யத்​தின் முன்பு திரா​விடம் மண்​டி​யிட்​டது. மண்​டி​யிட்​டால் கூட பரவா​யில்லை குப்​புற​விழுந்து கும்​பிட்​டது. இதில் சுயமரி​யாதை பற்றி பேசுகிறீர்​கள். இது​தான் தன்​மான​மா… தமி​ழினத்​தின் தலை நிமிர்​வா… சுயமரி​யாதை இது​தா​னா? காளி​முத்​து, திரு​நாவுக்​கரசர் ஆகிய இரு​வரைத் தாண்டி யாரேனும் ஒரு​வர் ஜெயலலிதா முன்​பாக நிமிர்ந்து நின்று பேசி இருக்​கி​றார்​களா? திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் சுயமரி​யாதை பற்றி பேச தகுதி இல்​லை.

    எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் பாஜக தேவையற்ற வேலை​யைச் செய்​கிறது. மக்​களை பதற்​ற​மாகவே வைத்​திருக்​கப் பார்க்​கி​றார்​கள். அப்​போது​தான் செய்​கிற தவறு வெளியே தெரி​யாமல் இருக்​கும். ஆவணங்​கள் கொடுக்​க​வில்லை என்​றால் பெயர்​களை நீக்​கு​வோம் என தேர்​தல் ஆணை​யம் இப்​போது தெரிவிக்​கிறது.

    இரண்டு மாதத்​தில் தேர்​தலை வைத்​துக் கொண்டு என்ன ஆவணங்​களை கொடுக்க முடி​யும்? பிஹார் போன்ற வட மாநிலங்​களில் இருந்து தமி​ழ​கம் வந்​தவர்​களுக்கு வாக்​குரிமை வழங்க இந்த வேலை​யைச் செய்​கி​றார்​கள். அப்​படி வழங்​கும் போது தமிழ்​நாடு மற்​றுமொரு பிஹா​ராக மாறி​விடும்… என்றார்​.

    seeman#bjp#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை… தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்
    Next Article ‘உனக்காக மனைவியை கொன்றேன்’: காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்
    Editor TN Talks

    Related Posts

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    June 15, 2026

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    June 15, 2026

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    வேலூரில் பகீர் சம்பவம்: 6 வயது சிறுவன் நரபலியா..?? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.