Author: Editor TN Talks

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் பூசும் பணிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பமாக, மலையாள நடிகர் ஜெயராமை அமலாக்கத் துறை (ED) விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கேரள காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) நடிகர் ஜெயராமை சாட்சியாக விசாரித்திருந்த நிலையில், தற்போது பணப்பழிவழக்கு தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜெயராமிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் பொட்டிஎன்பவருடன் ஜெயராமுக்கு இருந்த தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறவுள்ளது. குறிப்பாக, சென்னையில் நடிகர் ஜெயராமின் வீட்டில் நடைபெற்ற ஒரு பூஜையில் சபரிமலை தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அமலாக்கத் துறை விளக்கம் கேட்க உள்ளது. இதுகுறித்து நடிகர் ஜெயராம் கூறுகையில், “தான் முழுமையாக பக்தி உணர்வோடு மட்டுமே செயல்பட்டதாகவும், தங்கம் தொடர்பான எந்த…

Read More

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு ஒன்று கடித்தத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ”திமுக ஆட்சியில் அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப் பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர்போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்து விடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?போன்ற அச்சங்களுக்கு நடுவே மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதற்கு இடையே ரிஷிவந்தியம் அருகேயுள்ள கீழ்த்தேனூர் அரசுப் பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வரும் செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக் கல்வித் துறை இருக்கிறதா? அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது உங்களுக்கு வேலை செய்ய…

Read More

தமிழ்நாட்டில் கடந்தாண்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இடம்பெயர்ந்து சென்றவர்கள், இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பொருட்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் கூட, பணிகளை மத்திய அரசு நிறுத்தவில்லை. வீடு வீடாக சென்று பூத் அலுவலர்கள் விண்ணப்ப படிவங்களை மக்களுக்கு விநியோகித்ததுடன், பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் பெற்றனர். கடந்த அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி 6.41கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர் பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் பிப்.10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கன அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84லட்சம்…

Read More

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமக இன்று இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு பக்கம் ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி, எனது கடைசி மூச்சு வரை நான் மட்டுமே தலைவராக இருப்பேன் எனக் கூறி வருகிறார். இன்னொரு பக்கம் அன்புமணி, பாமக பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவு படி தானே தலைவர் என்று கூறி வருகிறார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்ற போது, பாமக தலைவராக 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியே தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனால் பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.…

Read More

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அரசு செவிலிய பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திமுக அரசு பொறுப்பேற்றப்பிறகு 8,834 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேப் போல 3009 ஒப்பந்த செலிவியர்களுக்கு பணி நியமண ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியர்களுக்கு ஏற்கனவே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் 390 பேர் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், மீதமிருந்த 719 பேருக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையின் பேரில், அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா காலத்தில் பணிபுரிந்த 719 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் செவிலியர்களின் தேவை அதிகரித்து வரும் காரணத்தினாலும், செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உலகமெங்கும்…

Read More

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் மற்றும் ஸ்கைவாக் பணிகள் ஜனவரி 2026-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கைவாக் பணிகள் முழுமையடையாததால் பிப்ரவரி 2026-ல் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுவரையில் 50சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளது. ஜி.எஸ்.டி சாலையைக் கடக்காமல் பயணிகள் பாதுகாப்பாக பேருந்து நிலையத்தை அடைய ஸ்கைவாக் அவசியம். ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் ஜி.எஸ்.டி சாலை வழியாக இணைக்கும் ஸ்கைவாக் எனப்படும் நடைமேம்பாலப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இந்த புதிய ரயில் நிலையத்தில் இருந்து ஸ்கைவாக் வழியாகப் பயணிகள் நேரடியாகப் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல முடியும். விரைவில் இந்தப் பணிகள் முடிந்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஒரு பெரிய தீர்வாக இது அமையும். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் உயர்மட்ட ஆகாய நடைமேடை ரூ.79 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் நீளத்திற்கு மூன்று கட்டங்களாக…

Read More

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். தமிழகத்துக்கு புதிய திட்டங்களை அனுமதிக்க உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும்; மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி வழங்கவில்லை. அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு 2,500 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 931 ஹெக்டேர் நிலங்களுக்கு ரயில்வே துறை நிதி ஒதுக்கவில்லை. 94 சதவீத நிலங்களை கையக்கப்படுத்தும் பணி முடிந்து, அவை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 5 திடங்களுக்கு ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணை இன்னும் வழங்கப்படவில்லை. நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக தாமதமின்றி நிதி விடுவிக்க வேண்டும்” என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சென்னை புரசைவாக்கம் தொகுதியில் 2006-ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ வாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வடசென்னை திமுக மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர், பின்னர் 2011-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகினார். 2011 தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இணைந்த அவருக்கு, வடசென்னை வடக்கு ( மேற்கு ) மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் இவர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வி.எஸ்.பாபு தற்போது விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ளார். மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தன்னை விடுவித்ததில் அதிருப்தியாக இருந்தவர், விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் பனையூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை; எனக்கு அங்கு ஒத்துழைப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து ஏற்கனவே செங்கோட்டையன், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது வி.எஸ்.பாபுவும் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

பிரதமர் மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா – அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெராம் ரமேஷ் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 1. இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது. இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 2. இந்திய விவசாயிகளின் நலனைப் பலிகொடுத்து, அமெரிக்க…

Read More

ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சீமான், ” வேட்பாளர்கள் நேர்காணல் என்பது கட்சிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்?? என்ற அடிப்படையில் அல்ல. எல்லா தலைவர்களும் ஆளவேண்டும் என்று இருப்பார்கள். நாம் மட்டும் தான், அனைவரும் வாழ வேண்டும் என்று நினைகிறோம். ரத்தம் சிந்தாத போர் அரசியல். என் தலைவனுக்கு (வி.பு. தலைவர் பிரபாகரன்) முருகன் மீது நம்பிக்கை இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு முருகன் மீது நம்பிக்கை வந்தது. பிரபாகரனிடம் இருந்து வந்த சீமான் என்னும் தோட்டா இப்போது 234 தொகுதிகளிலும் தோட்டாக்களை இறக்கியுள்ளேன். பெண்களுக்கு அதிக இடம் கொடுப்பது பெருமையில்லை, அது கடமை” என்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “…

Read More