Author: Editor TN Talks
கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். மதபோதகர் ஜான் ஜெபராஜ் சமீபத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் ஜான் ஜெபராஜ் குறித்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சின், வழக்கறிஞர் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த ஜான் ஜெபராஜ் ஆதரவாளர் ஜோஸ்வா எடிசன் என்பவர் சமூக வலைதளங்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களில் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பர் குறித்து அவதூறு பரப்பினார். இதை தொடர்ந்து வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ், நண்பர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஜோஸ்வா எடிசன் மீது புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நள்ளிரவு சுமார் 1.15 மணிக்கு ஜோஸ்வா எடிசன் செல்போன் மூலம் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சின் நண்பர் ரியல் எஸ்டேட்…
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் டெர்ஹ்வித்துள்ளது. இதற்கிடையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வடக்கு திரையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால், கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவெடுத்த நிலையில் இன்று (24.05.2025)மாலை கரையை கடக்க இருக்கக்கூடிய நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை,கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண்…
15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை வரும் 29ம் தேதி காலை 11மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 1.43 லட்சம் ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. போக்குவரத்து ஊழியர்களின், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, இதுவரை இரண்டு கட்ட பேச்சு நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த மாதம், 13, 14ம் தேதிகளில் நடந்த கூட்டத்தில், 80க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளிடம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு நடத்தினார். அப்போது, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார். இந்த நிலையில், 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வரும் 29ஆம்…
தென்மேற்கு பருவமழை இந்த வருடன் முன்கூட்டியே தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அக்னி வெயில் 28-ம் தேதி வரை உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது மழையின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி பகுதியில் 2 நாட்கள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழு வால்பாறை சென்று உள்ளது. கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் குழு 90 பேர் வந்து உள்ளனர். மீட்புக் குழுவில் 30 பேர் ஒரு குழுவாக செயல்படுவார்கள் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் மிகவும் உதவி உள்ளது. கோவையில் பலத்த மழை பெய்தால் 4…
கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையை பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த வேதனையான விஷயங்களையும், நிகழ்ந்த அவலங்களையும் வெளிப்படையாக பேசும் ஒரு தளமாக இந்த கலை மேடை உள்ளது. இதனை பயன்படுத்தி உலகம் முழுவதும் தங்களது வலியை எடுத்துச் சென்றதுடன், ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனவர்கள் நிறைய பேர். அப்படி ஒருவர் ‘கிரண் தாஸ் முரளி’. இவரை இப்படி குறிப்பிடுவதை விட ‘வேடன்’ என்று கூறினால் பலருக்கும் தெரியும். இந்தப் பெயர் அவருக்கு ஆசையாய் வைத்த பட்டப்பெயர் அல்ல. அவரது சாதியாலும், இனத்தாலும் ஆதிக்க சாதியினராலும் இழிவாக வைக்கப்பட்ட பெயர் வேடன். அதனையே தனது அடையாளமாய் மாற்றி அனைவரது முகத்திலும் கரியை பூசியவர் ‘கிரண் தாஸ் முரளி என்கிற வேடன்’. கேரள மாநிலம்…
பொள்ளாச்சி அருகே மனநல காப்பகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட்’ எனும் தனியார் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மர்மமாக காணாமல் போன விவகாரம் தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. சோமனூரைச் சேர்ந்த 22 வயதான வருங்காந்த் என்ற இளைஞர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். மே 15ஆம் தேதி, சுற்றுலா செல்வதற்காக ஆழியார் பகுதியுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், இளையஞர் காணாமல் போனதாகவும் தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து, மே 16ஆம் தேதி தந்தை ரவிக்குமார் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மகனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். முக்கியமாக, இளைஞரின் புகைப்படம் மற்றும் அடையாள விவரங்களுடன், இரு தொலைபேசி எண்கள் கொடுத்து, சுற்றுவட்டாரப்…
தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மழையால் ஏற்படும் சிரமங்களுக்கு முன்னேற்பாடுகளோடு இருக்க வேண்டும் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இடுக்கி மாவட்டம், மூணாறை ஒட்டிய தேவிகுளம் மிடில் டிவிஷன் பகுதியில் நடந்த வனவிலங்கு தாக்குதல் சம்பவம் தற்போது பகுதி மக்களில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவர் வளர்த்து வந்த செல்ல நாய், வியாழக்கிழமை காலையில் இருந்து காணாமற்போனது. மாலை வரை நாய் வீடு திரும்பாததால் சந்தேகத்துடன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தார். அதில் அதிகாலை நேரத்தில் வீட்டு முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாயை, திடீரென புலம்பெயர்ந்த சிறுத்தை ஒன்று தாக்கி, அதன் கழுத்தைப் பற்றி கடித்து ரத்தம் குடித்து இழுத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் விலங்குகள் நுழையும் சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் மீண்டும் பதிவாகி இருப்பது, பொதுமக்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து, சிறுத்தையை பாதுகாப்பாக பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் தற்போது…
மதுரை உலக தமிழ்சங்க கூட்டரங்கில், கவிஞர் வைரமுத்துவின் தலைமையில் வெற்றி தமிழர் பேரவையின் மறுசீரமைப்புக்கூட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், மருத்தவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்வில் புதிய நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்தினார். பின்னர் உரையாற்றிய அவர், “தமிழர்களின் நாகரிகம் என்னவென கேட்டால், ‘திருக்குறள்’ என்று கூறுங்கள். திருவள்ளுவர் நம் ஞானத் தந்தை,” என தெரிவித்தார். மேலும், “மனிதவளத்தை சீரழிக்கும் மதுவும் புகையும் இனிமேல் தொடமாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்,” எனக் கேட்டார். நிகழ்வில் அனைவரும் எழுந்து உறுதிமொழி எடுத்தனர். “2 மலையாளிகள் சந்தித்தால் டீ கடை, 2 தமிழர்கள் சந்தித்தால் போலீஸ் ஸ்டேஷன்” என சமூகப் பராமரிப்பில் தமிழர்களிடையே ஒற்றுமை குறைவைக் குறிப்பிட்ட அவர், இங்கு தமிழர்கள் ஒருமித்திருப்பது பெருமை என குறிப்பிட்டார். மதுவால் ஒரு குடும்பம் நாசமாகும், ஒரு மகன்…
நிதி ஆயோக்-ல் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பட்டுவருகிறது. இக்குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்று உள்ளார். ஆண்டுதோறும் ஒருமுறை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம், இம்முறை தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு சென்றுள்ளார். இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிற ஸ்டாலின், தமிழகத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய, பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை விடுக்க உள்ளார். இதேபோல, மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது மாநில நிதி தேவைகளை முன்வைக்கவுள்ளனர். கூட்டம் முடிந்த…