Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மனநல காப்பகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் மர்மமாக உயிரிழப்பு.. விசாரணையை தொடங்கிய காவல்துறை!!
    தமிழ்நாடு

    மனநல காப்பகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் மர்மமாக உயிரிழப்பு.. விசாரணையை தொடங்கிய காவல்துறை!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250524 WA0015
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொள்ளாச்சி அருகே மனநல காப்பகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

     

    பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட்’ எனும் தனியார் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மர்மமாக காணாமல் போன விவகாரம் தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.

     

    சோமனூரைச் சேர்ந்த 22 வயதான வருங்காந்த் என்ற இளைஞர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். மே 15ஆம் தேதி, சுற்றுலா செல்வதற்காக ஆழியார் பகுதியுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், இளையஞர் காணாமல் போனதாகவும் தகவல் வழங்கப்பட்டது.

    https://tntalks.in/storage/2025/05/VID-20250524-WA0011.mp4

    இதையடுத்து, மே 16ஆம் தேதி தந்தை ரவிக்குமார் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மகனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். முக்கியமாக, இளைஞரின் புகைப்படம் மற்றும் அடையாள விவரங்களுடன், இரு தொலைபேசி எண்கள் கொடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

    https://tntalks.in/storage/2025/05/VID-20250524-WA0012.mp4

    இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வந்த காவல் விசாரணையில், இளைஞர் காப்பகத்திலேயே அடித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரது சடலம் மே 12ஆம் தேதி காப்பகத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு, நடுப்புணி – பி.நாகூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், ஒரு JCB வாகனம் மற்றும் கருப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய கார் சம்பந்தப்பட்டதாகவும், அந்த வாகனங்களில் பெண் மருத்துவர் கவிதா உள்ளிட்டோர் பயணித்ததாகவும் தகவல் வெளியானது.

     

    இதைத் தொடர்ந்து, இன்று காலை பி.நாகூர் தோட்டம் பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். சடலம் இருப்பதாக கூறப்படும் இடத்தில், சுற்றியுள்ள 1 கி.மீ. வரையில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தை தோண்டிய பின் மட்டுமே, சடலத்தின் இருப்பு உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

     

    மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

    death Disabled police investigation இளைஞர் உயிரிழப்பு மனநல காப்பகம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
    Next Article யார் இந்த வேடன்… ’ராப் பாடகர்’ முதல் போலீஸ் கைது வரை…
    Editor TN Talks

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    June 17, 2026

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.