Author: Editor TN Talks
பட்டமளிப்பு கொண்டாட்டம்! நடிகை சிம்ரன் மற்றும் தீபக் பாக்காவின் மகன் பட்டம் பெற்றார்! பட்டமளிப்பு விழாவின் பரிமளம் நிறைந்த இந்த நாட்களில், பிரபல நடிகை சிம்ரனும், அவரது கணவர் தீபக் பாக்காவும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். இவர்களின் மகன் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து, பட்டம் பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், சிம்ரன் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். பலரும் வாழ்த்துகளும், பெருமைமிகுந்த பதிவுகளும் பகிர்ந்து வருகின்றனர். சினிமா துறையிலும், குடும்ப வாழ்க்கையிலும் சிறந்த முன்னேற்றம் காணும் சிம்ரனுக்கு இது மேலும் ஒரு பெருமைமிக்க தருணம். வாழ்த்துக்கள் சிம்ரன் & தீபக் பாக்கா குடும்பத்துக்கு!
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், தமிழகத் தளத்தில் இப்படத்தின் விநியோக உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் முந்தைய படங்களையும் விநியோகம் செய்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மீண்டும் இணையப்போவது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ் கொடுத்தால் பெற்றோர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு தவறான மதிப்பெண் பட்டியல் , தவறான சாதி சான்றிதழ், தவறான பிறப்புச் சான்றிதழ் மற்றும் போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்காெள்ளப்படும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 2024-25 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையின் போது என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் போலி ஆணவங்களை அளித்ததை கண்டுபிடித்தனர். அதேபாேல் தவறான சான்றிதழ்களை அளித்தும் மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்ததையும் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் மருத்துவக்கல்வி மாணவர் சேரக்கை குழுவின் விசாரணை நடத்தியப் போது, அந்த தவறுகளை தாங்கள் செய்யவில்லை எனவும், பதிவு செய்த…
“நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு உயர் மருத்துவ சேவைகள் வழங்க 862 மருத்துவ முகாம்கள் ரூ12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும்” என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில், ஜூன் 2025 முதல் பிப்ரவரி / மார்ச் 2026 வரை 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் நடத்தப்பட…
ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி நடைபெற்றது. இதை நம்பி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்களில் முதலீடு செய்தனர். ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடுகளை பெற்றுக் கொண்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி , பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தார். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் பதியப்பட்டது. இதில் சேலத்தில் பதியப்பட்ட வழக்கில் 385 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பானது வழங்கப்பட்டது. மோசடி செய்த ஈமு கோழி உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அபராதமாக 7 கோடியே…
’தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் போய் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, ’’பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்’’ என ஏன் பொய் சொன்னார்? கள்ளக் கடத்தல்காரர்கள் மாதிரி கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வீடு. பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார். ‘’ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. அது…
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. கர்நாடகாவில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால், அங்கு படம் வெளியாகவில்லை. இந்தச் சினிமா வெளியான முதல் நாளிலேயே எதிர்பார்ப்புக்கு மாறாக ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில், பாடல்களே படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது சமீபத்திய சில படங்களின் முதல் நாள் வசூலை ஒப்பிடும் போது குறைவாகும். உதாரணத்திற்கு: சூர்யாவின் ‘ரெட்ரோ’ – ₹19.25 கோடி கமலின் ‘இந்தியன் 2’ -…
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என , மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர். எனவே முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில்…
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் இரு இளைஞர்கள் ஒருவர் மற்றொருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த பகுதியில் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும்.. இன்று (06.06.2025) மதியம் 12 மணியளவில், இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இரு இளைஞர்கள் வாகனம் மோதி ஏற்பட்ட சலசலப்பால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் நேரில் சண்டையில் இறங்கினர். பத்து நிமிடங்களுக்கு மேலாக நடந்த சண்டையால் சுற்றுப்புறத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற போலீசாரில் ஒருவர் இருவரையும் தடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். விசாரணையில், அவர்கள் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த நசீர் மற்றும் அசார் என தெரியவந்தது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்: ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் ( எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பணியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.…