Author: Editor TN Talks
இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின்பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்ததிட்டத்தின்படி, 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வந்தன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அதன்படி நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்- மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், சாமல்பட்டி ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன. புதிதாக திறக்கப்பட்ட ரயில்நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம்,…
சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகே உள்ள புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாண்டு முனியப்பன் கோவிலில் வைகாசி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொடடி இன்றைய தினம் கோவில் அருகில் உள்ள திடலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 70க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிர கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். ஒவ்வொரு காளையாக அழைத்து வரப்பட்டு கோவிலில் பூஜை செய்த பின்னர் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்படிருந்தனர். எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கதிரவன் என்பவரை காளை ஒன்று தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அங்கு இருந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதி விஜய்க்கு கை கொடுக்குமா? அரசியலில் மதுரை சென்டிமென்ட் சட்டமன்ற தேர்தல்களில் மதுரை மிக முக்கியமான இடமாகப் பார்க்கப்படுகிறது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிக இடங்களில் வென்ற கட்சி மட்டுமே இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் 1980-ம் ஆண்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்றார். அந்த ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்து, அவர் முதலமைச்சரும் ஆனார். அதேபோல் 2011, 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்து 3 முறை அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று நீண்ட காலமாக அதிமுகவின் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏவாக இருக்கிறார். மறுமுனையில், திமுகவின் முக்கிய தலைவர்களான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி,…
கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை, சித்ரா பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் விமான மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதில் அவ்வப் போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதுடன் அதிகாரிகள் சோதனைகளில் பிடிபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி…
டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இந்த விசாரணையை மேற்கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின மீது நடவடிக்கை எடுப்பதா ? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமலக்கத்துறை இந்த வழக்கில் வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன்வைத்துள்ளார்கள். அமலக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என நீதிபதிகள் கண்டனம்…
டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகள் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல…
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து திருக்குறளுக்கு தாம் எழுதியிருக்கும் உரை நூலின் பெயரை வெளியிட்டுள்ளார். வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் வெளியாகவுள்ளதாக காணொலி வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் மூத்த பாடலாசிரியராகவும் கவிஞராகவும் திகழும் வைரமுத்து, கடந்த சில மாதங்களாக திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதி வருவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திருக்குறள் உரை முழுவதும் நிறைவடைந்தது என அறிவித்தார். அதுகுறித்த அவரது அறிவிப்பில், ‘உலகத் தமிழ் உள்ளங்களே வணக்கம். திருக்குறள் நிறைந்துவிட்டது; முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன்; கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது. ஈராயிரம் ஆண்டை இருபது வயதிற்கு எடுத்துச் செல்வது; அறமும், பொருளும் ஞானப் பொருளாகவும், இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று. நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன். நூலின் தலைப்பை மே 22-ம் தேதி இதே தளத்தில் அறிவிக்கிறேன். நீங்கள் என்மீது வீசும் ஒவ்வொரு பூவிலும் குருதி…
டெல்லியிலிருந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட இண்டிகோ விமானம், கடுமையான வானிலைச் சிக்கல்களை சந்தித்தது. இருந்தாலும், விமானம் பாதிப்பின்றி ஸ்ரீநகரில் தரையிறங்கியது. டெல்லியில் வானிலையில் திடீர் மாற்றம்: அடிக்கடி 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாடித்தாடிய டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை வானிலை திடீரெனவே மாறியது. பல பகுதிகளில் ஆலங்கட்டி மழையும், பலத்த காற்றும், தூசி புயலும் ஏற்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்திலும் குழப்பம் ஏற்பட்டது. சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தரையிறங்க வேண்டிய டெல்லி விமான நிலையத்திலிருந்து மாற்றப்பட்டன. சேதமடைந்த விமானம்: இண்டிகோ நிறுவனத்தின் 6E 2142 விமானம், நேற்று மாலை 5 மணிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்டது. பயணத்தின்போது கடுமையான வானிலை காரணமாக விமானிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கைகள்…
அரபிக்கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யும் சீமானும் பாஜகவினால் இயக்கப்படுகின்ற பாஜகவின் கைக்கூலிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காமராஜர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா, நலத்திட்டம் வழங்கு விழா மற்றும் பொதுக்கூட்டம் விடுதலைச் சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நகரச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதையும் படிக்க: இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்! அப்போது வன்னி அரசு பேசுகையில், “எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய கட்சி என்றால்…