Author: Editor TN Talks
2026 சட்டமன்ற தேர்தல் நமது இலட்சியம், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தொண்டர்களிடையே உற்சாகமாக பேசினார். முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் கொள்கைபரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன்,…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஏககாலத்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் தண்டனை விவரங்கள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார்….. அப்போது பேசிய அவர்….. முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை 30 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது, ஆயுள் தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும், இந்த காலத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது, புலன் விசாரணை மிகவும் சிறப்பாக நடைபெற்றது…. 11 குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தரப்பில் வாய்மொழியாகவும் ஆவணப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக கூறினார்…. மேலும் பேசிய அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்றால் அது ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசி தான், அவர் சமூக…
தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,920 ஆக உள்ளது. ஆனாலும், நகைக்கடைகளில், காய்கறி சந்தையில் உள்ளது போலேவே கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதன் விலையில் மாற்றம் ஏதுமில்லாமம் வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று வாரத்தின் தொடக்க நாளிலேயே சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. கடந்த சில நாட்களில் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்: 31-05-2025 – ஒரு சவரன்…
கர்நாடகாவில் சமீபகாலமாக கன்னட மொழி பேச மறுத்து இந்தியில் தான் பேசுவோம் என்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் இது.. கர்நாடக தலைநகர் பெங்களூரின் பெல்லந்தூர் பகுதியில் ஆட்டோ ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும் போக்குவரத்து நெரிசலின் போது உரசிக் கொண்டன. இதையடுத்து பைக்கில் வந்த அந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் சகட்டு மேனிக்கு அர்ச்சித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண்தான் போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் வந்து ஆட்டோ மீது மோதியதாக அந்த ஓட்டுநர் எடுத்துக் கூறியும் கேளாமல் அவர் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனை ஆட்டோ ஓட்டுநர் தனது மொபைல் போனில் படம்பிடிக்க, ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பைக் கழட்டி அவரை சரமாரியாக தாக்கினார். இதுவும் அந்த மொபைல் காட்சியில் பதிவானது. கன்னடத்தில் இவர் பதில் கூற, அந்த பெண் இந்தியிலேயே திட்டிக் கொண்டும்,…
அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார். இன்று பெரும்பாலான திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்கள் வைக்கப்பட்டு, அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பைப் பார்க்கும்போது வாலியின் வைர வரி தகுந்த வாழ்த்தாகத் தொனிக்கிறது. இளையராஜாவின் வெற்றி ரகசியம் பண்ணைபுரத்திலிருந்து வந்து, அன்னக்கிளி மூலம் தமிழ்த் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி, 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த அபூர்வ கலைஞராக வலம் வருகிறார் இளையராஜா. மண்ணின் மனமான நாட்டுபுற இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, செவ்விசை என இசையின் அனைத்து பரிமானங்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு, அவற்றைத் தனக்கே உரிய புதுபாணியில் கோத்து இசையமைப்பதில் வல்லமை அடைந்தார். கடும்தவம்போல் தினம் செய்யும் பயிற்சிகளின் மூலம் மெட்டமைத்தல் என்ற பணி மூச்சுவிடுவதுபோல் அவரால்…
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றும், திமுக ஆட்சியில் எஞ்சியுள்ள பாலியல் வழக்குகளுக்கு நீதி கோரியும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் தி நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது தமிழக பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் முன்னெடுத்த அறப்போராட்டங்களின் விளைவாகவும், நாம் கொடுத்த அழுத்தங்களுக்கு பதிலாகவும் அண்ணா பல்கலைக் கழக கொடூரச் சம்பவத்தின் நேரடிக் குற்றவாளி ஞானசேகரன் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மகளிர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். ஆனால் அதே சமயம் இந்த வழக்கில் மறைமுகத் தொடர்புடைய அந்த “சார்” யார் என்ற கேள்வியும், ஒருவேளை திமுக-வில் உள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டதா என்ற…
“வடசென்னை 2” ஷூட்டிங் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என்று குபேரா பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கூறியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்துக் கொண்டால் அது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த வடசென்னை படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு. வடசென்னையின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய அவர்களின் வாழ்வியலை பிரதிபலித்த உன்னத படைப்பு வடசென்னை. கடற்கரையோரங்களில் வசித்து வந்த மீனவ மக்கள், விரிவாக்கம் என்ற பெயரில் எப்படி ஆதிக்க சக்தியினராலும், அரசாலும் பூர்வகுடியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பதை ரத்தமும்,சதையுமாக விவரித்ததில் வடசென்னை படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. 1975 தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் காசிமேடு, ராயபுரம் பகுதியில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் புனைவு கலந்து உருவாக்கப்பட்ட படைப்பே வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல்…
கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் சிகரெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கான வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின் 4, 4ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி கர்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; அதேபோல், இதுவரை 18 ஆக இருந்த புகைப்பிடிப்பதற்கான வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டம் 200 ரூபாயிலிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டம் மிகப்பெரிய வரம் ஆகும். இந்தியாவின்…
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும். பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 7 மற்றும் 8ம் தேதி தவிர்த்து மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜுன் 9ம் தேதி இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். 10ம் தேதி, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ம் தேதி இறுதி நாளாகும். விரைவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், எனவே அறிவிக்கப்பட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். திமுக சார்பில்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையால் மறைக்கப்பட்ட அந்த சார்? யார்? என்பதை அதிமுக ஆட்சி அமைந்ததும் வெளிக்கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு… அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அஇஅதிமுக. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும்…