Author: Editor TN Talks

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சமீபத்திய பதற்றமான மோதலின் போது, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்ததற்காக துருக்கிக்கு எதிராக இந்திய வியாபாரிகள் நவீனமான நிதி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் புறக்கணிக்கப்படுகின்றன. துருக்கியின் பக்கம் பேசியது யார்?: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த பதற்றத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நாட்டு தயாரிப்பு ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செயல், இந்தியாவை உற்சாகமாக கலங்கடித்ததோடு, வியாபார வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துருக்கிக்கு ரூ.1000 கோடி இழப்பு?: இந்த செயலை கண்டித்து, புனே நகரத்தைச் சேர்ந்த பல்வேறு வியாபாரிகள் துருக்கி ஆப்பிள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். புனே வேளாண் பொருட்கள் சந்தை குழுவைச் சேர்ந்த வியாபாரி சுயோக் ஜெண்டே தெரிவித்ததாவது: இதையும் படிக்க: ராணுவம் பற்றி வார்த்தை விட்ட செல்லூர் ராஜூ.. வலுக்கும் கண்டனம்… “துருக்கியில் இருந்து ஆப்பிள்களை வாங்குவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம். இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான்…

Read More

ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பாங்கரவாதிகளின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்க, அமெரிக்கா தலையீடின் படி இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்திய ராணுவ வீரர்களின் சாதனை அளப்பரியது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதனை விமர்சிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டுமே தவிர இந்திய ராணுவத்திற்கு அல்ல, என…

Read More

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காததால், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி அதில் மீண்டும் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும்…

Read More

டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி…

Read More

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ச்சியாக இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றை இந்திய ராணுவம் முழுமையாக முறியடித்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ம் தேதி அறிவித்ததின்பேரில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

Read More

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் சந்தையில் மருத்துவக் குணம் கொண்ட ஒரு மீன் ரூ.26,000-க்கு விற்பனையானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை பகுதி என்பது கடல் சார்ந்த பகுதி. இப்பகுதியில் உள்ள ஆசாத் நகர் மற்றும் பெரியக்கடை தெரு மீன் சந்தைக்கு, பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு குவிக்கப்படும். இதில் குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்பகுதியில் உற்பதியாகும் கொடுவா, கெண்டை மீன், வெள்ளாம் பொடி, கத்தாஐ போன்ற மீன்கள் அதிகளவில் விற்பனையாகும். மற்றவகை மீன்கள் அருகேயுள்ள நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கு விற்பனை கொண்டுவரப்படுகிறது. முத்துப்பேட்டை அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் பகுதியிலிருந்து அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒரு கிலோ கத்தாழை மீன் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண்…

Read More

ஓர் இரவு கடையின் நேரம் முடிந்துவிட, சில முக்கியஸ்தர்கள் மட்டும் கடையில் மதுவருந்திக்கொண்டு சீட்டாடிக்கொண்டு இருக்க, கடையின் முதலாளி சிவாஜி தூக்கில் தொங்க, இது தற்கொலையாக இருக்கமுடியாது. கொலையாகவும் கூட இருக்கலாம், என்று செம்பன் வினோத் ஜோஸி கூற.. அந்த இரவு…!?அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் விசாரனையே “ப்ரவின்கூடு ஷாப்பு “”படத்தின் கதை. மலையாளிகளுக்கே உரித்தான டார்க் காமெடி சஸ்பென்ஸ் திரில்லர் வகை ஜானர். காமெடிக்கு பஸில் ஜோசப் இருக்க, மற்ற கேரக்டர் எல்லாம் அவருக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரனை காட்சிகளை சொல்லலாம். தற்கொலை அல்ல, கொலை தான் என்று சௌபின் ஷகிரும், செம்பன் வினோத்தும் பேசிக்கொள்ளும் இடம்.., இயாலாமையும் – இறுமாப்பு கொண்ட இரு துருவங்களை நம் கண்முன் கொண்டு வருகிறார்கள் இருவரும். சாந்தினியும் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். எல்லோரிடம் பகை இருக்கிறவன் திடீரென இறந்து போக, அடுத்து என்னென்ன நடக்குமோ??…

Read More

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் ’கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியவர், ’அழகிய அசுரா’என்ற படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார். ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் வில்லியாக நடித்து அசர வைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் தாண்டி பாலிவுட்டில் சன்னி தியோலுடன் ’ஜாத்’, அக்‌ஷய் குமார் அனன்யா பாண்டேவின் ‘கேசரி2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.…

Read More

வன்னிய சங்க தலைவராக இருந்த ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், இயக்குநர் கெளதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.குருவின் மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்னியர் சங்க தலைவராகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தங்கள் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் பாமக நிறுவனர் இராமதாஸ்க்கு மிக நெருக்கமான இயக்குநர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற பெயரில் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படத்தை தங்கள் அனுமதி பெறாமல் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு வரும் மே 23 ம் தேதி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும், ஜெ. குருவின் குடும்பத்தினர் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டுள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க…

Read More

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே13) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பி.ஆர். கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்…

Read More