Author: Editor TN Talks

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது. திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்க எங்களுக்கு மனம் இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு,…

Read More

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருந்தாலும், இது தாமதமாகக் கிடைத்த நீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்த கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையாக இருக்கும். இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை. 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுக்க உதவிய அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை..…

Read More

2019ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை மற்றும் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்… பொள்ளாச்சி வழக்கு – கடந்து வந்த பாதை கடந்த 2019ம் ஆண்டு இளம் பெண்கள் மற்றும் மாணவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பெண் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தன் பேரில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2019 மார்ச் 5ம் தேதி தலைமறைவாக இருந்து வீடியோ பதிவு வெளியிட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச…

Read More

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதல் தான் கொடூரமானது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான சேர்ந்த முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தனது வெளிநாடு பயணத்தை பாதியிலேயே முடித்து விட்டு நாடு திரும்பிய பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம், ராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் என ஆலோசனை மேற்கொண்டு பதில் தாக்குதலுக்கு அனுமதி அளித்தார். தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டது. 4 நாட்களாக நடந்து வந்த தாக்குதல்கள் தற்போது அமெரிக்காவின் சமரச…

Read More

கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் நெல்லையை சேர்ந்த ரேணுகா பட்டத்தை தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் என்ற கிராமத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோயில். திருநங்கைகளின் குல தெய்வமாக கருத்தப்படும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். அத்தோடு சித்திரைத் திருவிழாவை ஒட்டி திருநங்கைகளுக்காக பல்வேறு போட்டிகளும் நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டுக்கான கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (13.05.2025) நடைபெற்றது. இதில் திருநங்கைகள் தங்களை புதுமணப் பெண் போல் அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அரவாண் சாமியை கணவராக பாவித்து கோயில் பூசாமி கையால் தாலி கட்டிக் கொண்டனர். திருநங்கைகளை…

Read More

பாலக்காடு ரயிலில் பயணம் செய்த பெண் மீது ரயிலின் படுக்கை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகலிவாக்கம் குமாரசாமி தெருவை சேர்ந்த 50 வயதான ஜோதி என்பவர், எழும்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்டிரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் நேற்று முன்தினம் (11.05.2025) அன்று பயணம் செய்துள்ளார். அப்போது சூர்யா படுக்கை வசதி கொண்ட பெட்டியின் கீழ் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே, சூர்யாவின் இருக்கைக்கு மேல் நடுப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் கீழே இறங்கியுள்ளார்.. அப்போது எதிர்பாராத விதமாக சங்கிலி கழன்றதால், படுக்கை கீழே படுத்திருந்த சூர்யா மீது விழுந்ததில், சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லாததால், ஆத்திரமடைந்த சூர்யாவின் கணவர் ஜோதி,…

Read More

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் யுவன்சங்கர் ராஜா பாடிய தெலுங்கு பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. BGM KING, LOVE DRUGS என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தனித்துவமான இசையால் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் யுவன், பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடுவதும் உண்டு. ஆனால் அவரது தந்தையும், இசைமேதையுமான இளையராஜாவின் இசையில் யுவன் ஒரு பாடலைக் கூட பாடியதில்லை. தற்போது தெலுங்கில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள ஒரு படத்திற்காக யுவன் ஒரு பாடலை முதன்முறையாக பாடியுள்ளார். பவன் பிரபா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ”ஷஷ்டிபூர்த்தி” படத்தில் ரூபேஷ் மற்றும் ஆகான்ஷா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 30-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சைதன்யா பிரசாத் எழுதிய இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் நித்யா ஸ்ரீ ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடம் தற்போது இணையத்தில்…

Read More

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது அறப்போர் கொடுத்த புகாரில் கூடுதல் ஆதாரங்களை அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பியுள்ளது. கடந்த 2011-2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, 2011-2016-ம் ஆண்டு வரை வீட்டு வசதிவாரிய அமைச்சராக வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது 2015-2016 காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டிஸ்-இன் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு வைத்திலிங்கம் ரூ.28கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. வைத்திலிங்கம் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது 2011-2016 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிமகாக ரூ.33கோடி சொத்து சேர்த்ததாக தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…

Read More

புரோட்டின் கொண்ட முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. அத்தோடு மாநிலம் முழுவதும் முட்டை கொள்முதல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (13.05.2025) முட்டை விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நாமக்கலில் இருந்து தான் பிராதனமாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கலில் இருந்து விற்பனை செய்யப்படும் முட்டையின் விலையானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடுகிறது. நாமக்கலில் நேற்று ரூ.5.25 காசுகளாக விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை சென்னையில் ரூ.5.80 காசுகளாக விற்பனையானது. அந்த வகையில் இன்று நாமக்கலில் முட்டையின் விலை ரூ.5.35காசுகளாக விற்பனையாகிறது. நேற்று (12.05.2025) நாமக்கலில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் இன்று (13.05.2025) ரூ.5.35காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர் அதேப் போல், நாமக்கலில் கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும்…

Read More

அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தூண்டும். இதனால் அரிய உயிரினங்களை கடத்தி கள்ளச்சந்தையில் கோடிக்கணக்கான மதிப்பில் விற்க வழிவகுக்கிறது. இதே போல், பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயம் மற்றும் பல மாநிலங்களில் காணப்படும் விஷமற்ற ரெட் சாண்டு போவா பாம்பும் உள்ளது. “இரண்டு தலை பாம்பு” என்று அறியப்படும் இந்த பாம்புக்கு நீண்ட காலமாக பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள், இதனை சட்டவிரோதமாக கடத்தும் போக்கை அதிகரித்துள்ளன. ரெட் சாண்டு போவாவுக்கு உண்மையில் இரண்டு தலைகள் இல்லை. அதன் வால் பாம்பின் தலையை ஒத்திருப்பதால் வேட்டையாடுபவர்களை குழப்பி தாக்குதல்களைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கத்தின் திட்ட மேலாளரும் வனவிலங்கு நிபுணருமான அபிஷேக், “டபுள் எஞ்சின் பாம்புகள்” என்று அறியப்படும் இவை முற்றிலும் பாதிப்பில்லாதவை என்றும், அவை அடக்கமானவையாய் தொந்தரவு…

Read More