Close Menu
    What's Hot

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்
    Featured

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    Editor web2By Editor web2July 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sp velumani press meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் . எஸ்.பி. வேலுமணி, கட்சிப் பொறுப்புகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதம் குறித்து விளக்கம் அளித்தார்.

    அவர் கூறுகையில், “நாங்கள் எழுதிய கடிதத்தில் எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்தவர்களும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதனால்தான் நானும், அன்பழகனும், தங்கமணியும் எங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தேவையில்லை; சாதாரண உறுப்பினர்களாகவே தொடர்கிறோம் என்று தெரிவித்தோம்” என்றார்.

    அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “வழக்கமாக வளர்மதி கூட்டத்திற்கு அழைப்பார். இந்த முறை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அதற்கு முன்பே நாங்கள் கடிதம் கொடுத்திருந்ததால், அந்தக் கூட்டத்திற்கு எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம்” என்று கூறினார்.

    ‘ஜாம்பவான்கள்’ என்ற தனது கருத்து குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த அவர், “நான் கூறியதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டேன்” என்றார்.

    மேலும், “அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதையே எங்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்” என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

    AIADMK EdappadiPalaniswami SPVelumani TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?
    Next Article “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    July 2, 2026

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 2, 2026

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.