Author: Editor web3

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தின் ஷீட்லா கோவிலில்  பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடியதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் நசுக்கப்பட்ட நிலையில் இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  துயரச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில்,  காலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். “பிரார்த்தனைகள் சுமுகமாக நடந்துகொண்டிருந்தன. கூட்ட நெரிசல் எப்படித் தொடங்கியது என்று யாருக்கும் புரியவில்லை. மக்கள் எல்லா திசைகளிலும் ஓடத் தொடங்கினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகளும் முறையான வரிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியாளர்களும்…

Read More

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் வகையில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தன்னை இத்தொகுதியில் போட்டியிட வைத்ததற்காக கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் சட்டமன்ற உறுப்பினரான பாலாஜி, எதிர்பாராத விதமாக கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். திங்களன்று கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்தில் தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு மக்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுகவுக்கு ஒரு மாபெரும் வெற்றியை அளிக்கத் தயாராக உள்ளனர்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியது ஏன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். 2021-ல் கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே, கோயம்புத்தூரில் போட்டியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூரில் உள்ள…

Read More

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் மறித்துச் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரைக்காகத் தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு முதலமைச்சர் சாலை மார்க்கமாகச் சென்றபோது, சாலியமங்கலம் பகுதியில் நிலை கண்காணிப்புக் குழுவினர் அவரது காரை நிறுத்தி அதிரடியாகச் சோதனையிட்டனர். காரின் உட்பகுதி மற்றும் உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, முதலமைச்சர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்காததால், சிறிது நேரத்திற்குப் பிறகு வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பாரபட்சமின்றி அனைத்து அரசியல் தலைவர்களின் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வாகனங்களிலும் பறக்கும் படையினர் இதே போன்ற சோதனைகளை நடத்தியுள்ளனர். “சட்டம் அனைவருக்கும் சமம்” என்பதை உறுதிப்படுத்தும்…

Read More

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (30.03.2026) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை அடுத்து, நேற்று காலை 11 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று ஒரே நாளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மாநிலம் முழுவதும் 573 பேர் முதல் நாளிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் மொத்தம் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில்…

Read More

இந்தியாவில் பல ஆண்டுகளாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, நாளை (ஏப்ரல் 1) முதல் டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது. முதற்கட்டமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை பொதுமக்கள் தங்கள் விவரங்களை தாங்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் ‘சுய விவரப் பதிவு’ (Self-Enumeration) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக தளத்தில் மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்து, கேட்கப்படும் 33 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். சுய விவரங்களை வெற்றிகரமாகப் பதிவிடும் நபர்களுக்கு 16 இலக்கத் தனித்துவ அடையாள எண் ஒன்று வழங்கப்படும். பின்னர், கணக்கெடுப்பு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, இந்த 16 இலக்க எண்ணைக் கூறினால் போதுமானது; மீண்டும் அனைத்து விவரங்களையும் அவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தரவுகளின் துல்லியத்தன்மையையும் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கணக்கெடுப்பின்போது எந்தவிதமான ஆவணங்களையும்…

Read More

சென்னையில் தங்கம் விலை இன்று (31) அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.800 சரிந்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு போன்றவை உள்நாட்டு சந்தையில் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.  நேற்று காலை நேரத்தில் விலை குறைந்திருந்தாலும், மாலை நேர வர்த்தக முடிவில் சவரனுக்கு திடீரென ரூ.1,360 வரை அதிகரித்தது. இத்தகைய அதிரடி உயர்வால் அதிர்ச்சியில் இருந்த சாமானிய மக்களுக்கு, இன்றைய விலை சரிவு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பங்குச்சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு காரணமாக வரும் நாட்களிலும் தங்கம் விலையில் மாற்றங்கள் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் வெள்ளி விலை ஒரு…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து கட்சி தேர்தல் பணிமனை அருகே பரப்புரையில் ஈடுபட்ட விஜய், சட்டம் – ஒழுங்கு சரியில்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எல்லாம் முக்கியம் கிடையாது என விஜய் குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனம் சென்ற போது பெரம்பூர், மூலக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளத்தூர் தொகுதிக்கு விஜய் வந்தபோது அங்கு ஏராளமானோர் கூடினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விஜயின் வாகனம் மெதுவாக நகர்ந்தது. பின்னர் அகரம் பகுதியில் பேசிய விஜய், தவெக கொளத்தூர் தொகுதி வேட்பாளரின் பெயரை மாற்றிக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நிமிடங்களில் பரப்புரையை முடிக்க காவல்துறை கூறிய…

Read More

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தனது முதற்கட்டப் பரப்புரையை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டார். அங்குத் திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றி முடித்த கையோடு, திட்டமிட்டபடி அடுத்ததாக வில்லிவாக்கம் பகுதியில்  தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து அவர் பரப்புரை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கொளத்தூர் நிகழ்வு முடிந்தவுடன் விஜய் திடீரென தனது நீலாங்கரை இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார். இதனால் வில்லிவாக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்யின் இந்த பிரச்சார பயண ரத்து குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், “வில்லிவாக்கம் பகுதியில் நிலவிய கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் காவல்துறையின் போதிய பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.  மேலும் ரத்து செய்யப்பட்ட பரப்புரைக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அண்ணாநகரில்…

Read More

மத்திய கிழக்கில் பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர், தற்போது வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இன்று (மார்ச் 30) அதிகாலை குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் தமிழகத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தான செல்வம்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தின் மின்சார அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜவஹர் ஹயாத் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த 40 வயதான சந்தான செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஷுவைபா ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப்  பணிபுரிந்த அவர், தாக்குதல் நடந்தபோது இரவுப் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம்,வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்தான செல்வத்தின் அகால மரணம்…

Read More

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வெளியே சென்று வரும் பலருக்கும் முகத்தில் எரிச்சல், சிவந்து போதல்  மற்றும் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற்று, முகத்தைச் சட்டுனு குளிர்ச்சியாக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகளை தெரிந்துகொள்ளுங்கள். வெயிலால் ஏற்படும் முக எரிச்சலைத் தணிக்க கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். இயற்கையான கற்றாழை ஜெல்லினை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவினால், தோலில் உள்ள வெப்பம் நீங்கி முகம் உடனடியாகக் குளிர்ச்சியடையும். அதேபோல், வெள்ளரிக்காய் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தடவி வரலாம். இது முகத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை அளிப்பதோடு, வெயிலால் ஏற்பட்ட கருமையையும் (Tan) நீக்க உதவும். மற்றொரு சிறந்த வழிமுறை தயிர் அல்லது மோர் பயன்படுத்துவதாகும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு இதமளிப்பதோடு, எரிச்சலைச் சட்டுனு குறைக்கும். மேலும், ரோஸ் வாட்டர் …

Read More