Author: editor5
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் இடையேயான மோதல் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்தது. தொடக்கம் முதலே உயர் தீவிரத்துடன் நடைபெற்ற இப்போட்டியில் செனகல் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய போதும், இறுதியில் பெல்ஜியத்தின் அனுபவம் மற்றும் தாக்குதல் திறன் வெற்றியைத் தேடித் தந்தது. போட்டியின் 24ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் இளம் நட்சத்திரம் ஹபிப் டியாரா அற்புதமான கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இந்தக் கோல் மைதானத்தை அதிர வைத்த நிலையில், திடீரென மூன்று ரசிகர்கள் களத்துக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் தலையிட்டு அவர்களை அகற்றினர். இதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது. இந்தச் சம்பவம் இரு அணி வீரர்களுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடைவேளிக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது, செனகல் அணி…
கரூர் மாவட்டத்தில் திமுக ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவரை சென்னை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை வேறொரு கட்சிக்கு மாறுமாறு மிரட்டி, பேரம் பேசியதாக யூடியூபர் IPDS திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருநாவுக்கரசு அளித்த முக்கிய தகவல்களின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த இரு திமுக பிரமுகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையிலிருந்து சிறப்புப் படை போலீசார் கரூர் விரைந்து, கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கோதை நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ‘சக்தி மெஸ்’ உணவகத்துடன் தொடர்புடைய கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, செந்தில் பாலாஜியின் கரூர்…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது முதல்வர் உள்பட 34 அமைச்சர்கள் பதவி வகிக்கும் நிலையில், சர்ச்சைகளில் சிக்கிய இரு அமைச்சர்களை நீக்கி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் வழங்கும் பரிசீலனையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அமைச்சரவை முழுமையாக நிரம்பியுள்ளதால், புதிய அமைச்சரை நியமிக்க ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலர் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கி கட்சியை வலுப்படுத்தவும், அரசின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் சர்ச்சைகளைத் தவிர்க்கவும் முதல்வர் விஜய் இந்த முடிவுக்கு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையாக, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ சரத்குமார் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர்…
வழக்குகள் கழுத்தை நெறிப்பதால் கட்சி மாறுகிறார்கள் என தவெகவில் இணையும் அதிமுகவினர் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன். அதிமுகவை விட்டு வெளியேறி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தங்கள் சுயநலத்துக்காகவே கட்சி மாறுவதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீப காலமாக அதிமுக-வில் இருந்து பல முக்கிய புள்ளிகள் தவெக-வுக்கு இணைவது அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ள நிலையில், இது தொடர்பாக கோவையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தனது கருத்தை தெரிவித்தார். அதில், “அதிமுக-வை விட்டுச் செல்பவர்கள் அனைவரும் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே மாறுகின்றனர். அவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தல், ஊழல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும்,…
திமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பறித்த மோசடி வழக்கில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 24-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இளஞ்செழியனை கைது செய்தனர். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரில், இளஞ்செழியன் தன்னிடம் பணம் பெற்று வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், உறுதியளித்தும் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதனால் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) சிவசங்கர் பெயரும் இடம் பெற்றது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை…
மாபெரும் இணைப்பு விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரம் Four Points by Sheraton ஓட்டலில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 2) முக்கிய அரசியல் இணைப்பு விழா நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். தனது அறிக்கையில் விஜயபாஸ்கர், “என் பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.க.வில் இணைகிறேன். த.வெ.க.வில் என்னை இணைத்துக் கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த இணைப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை காலை 9 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெராடன் ஓட்டலில் மாபெரும் இணைப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதிமுகவில் இருந்து ராஜினாமா…
இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான புவியரசு (96) நேற்று கோயம்புத்தூரில் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டை அருகே லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாக 1930-ல் பிறந்த புவியரசுவின் இயற்பெயர் சு. ஜெகநாதன். தமிழ் மொழிப் பற்றால் தனது பெயரை புவியரசு என மாற்றிக் கொண்ட இவர், கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இடைநிலைப் பட்டமும், பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டமும் பெற்றார். 30 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மார்க்சிய சிந்தனையாளராகவும், தமிழ்மொழி ஆட்சி மொழியாக்கப் போராட்டம் உள்ளிட்ட இயக்கங்களில் ஈடுபட்டவருமாவார். சமூகப் பொறுப்புணர்வு மிக்க கவிதைகளுக்கும், உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மொழிபெயர்ப்புகளுக்கும் பெயர் பெற்றவர் புவியரசு. வானம்பாடி இலக்கிய இயக்கத்தின்…
வெளிநாட்டுப் பயணங்களுக்கு அத்தியாவசியமான பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்கள் ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பல்வேறு பிரிவுகளிலும் கணிசமான விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வு காரணமாக சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மற்றும் தட்கல் முறை விண்ணப்பங்களின் செலவு அதிகரித்துள்ளது. புதிய விதிகளின்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண (புதிய அல்லது மறு வழங்கல்) பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500லிருந்து ரூ.2,500க்கு உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் இதே பாஸ்போர்ட் பெற ரூ.3,500லிருந்து ரூ.5,000 ஆக உயர்ந்துள்ளது. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கான சாதாரண கட்டணம் ரூ.2,000லிருந்து ரூ.3,500க்கும், தட்கல் கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.6,000க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறார்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000லிருந்து ரூ.1,750 ஆகவும், போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் (PCC) ரூ.500லிருந்து ரூ.750 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த உயர்வை அறிவித்த சூழலில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ‘புனித பீட்டர் பால்’ என்ற தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21-ம் தேதி இரவு நிகழ்ந்த இந்த விபத்தில், அங்கு பணியாற்றி வந்த 74 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாயு கசிவு ஏற்பட்ட உடனேயே தொழிலாளர்கள் சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுடன் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இந்த விபத்தில் முதல்கட்டமாக 16 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்டான்லி…
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்தி வருவது பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களில் நடைபெற்ற தாக்குதல்கள் போர் சூழலை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஜூன் 28ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 28 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 49 பேர் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டது. இந்தத் தாக்குதல் பொதுமக்களைக் குறிவைத்ததாக ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக இன்று ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு பாகிஸ்தானின் உள்நாட்டுப் பகுதிகளில் டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் சரண் பகுதியில் உள்ள ஒரு பள்ளி மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சில இடங்களை இலக்காக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இடங்கள் ISIS-K (Islamic State-Khorasan) அமைப்பினரின் மறைவிடங்களாகப் பயன்படுத்தப்படுவதாக…