Author: editor5

சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை… நற்பணி இயக்கம் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பிரபல தமிழ் நடிகர் சூர்யா அரசியல் களத்துக்கு வரும் வாய்ப்பு குறித்து பல ஊகங்கள் எழுந்த நிலையில், அவரது ரசிகர் அமைப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடிகருக்கு அரசியல் நுழைவு குறித்த எந்த எண்ணமும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 28.06.2026 அன்று மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட வீரமணி, தனது பேச்சின்போது “இது எனது தனிப்பட்ட கருத்து” என முன்கூட்டியே தெளிவுபடுத்தினார். இருப்பினும், அவரது உரையின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் தவறாக விளக்கப்பட்டு, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு போல பரப்பப்பட்டது. இந்த தவறான பிரச்சாரத்தை மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. “அனைத்து ஊடக மற்றும் சமூக…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய். ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியாக தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்பிலும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். பணம் நேரடியாக…

Read More

விக்டோரியாவில் அமைந்துள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். செசல்ஸ் நாட்டின் தலைநகர் விக்டோரியாவில் அமைந்துள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயிலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வருகை தந்தார். செசல்ஸின் 50-வது தேசிய தின விழாவில் கௌரவ விருந்தினராக பங்கேற்கும் மூன்று நாள் அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த தரிசனம் அமைந்தது. கோயிலுக்கு வந்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தென்னிந்திய திராவிட கட்டிடக்கலை பாணியில் 1992-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயில், செசல்ஸில் உள்ள ஒரே இந்து ஆலயமாக திகழ்கிறது. தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் தொடர் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம், பசுமை மலைகளுக்கு மத்தியில் அழகிய அடையாளமாக நிற்கிறது. சுமார் 15,000 பேர் கொண்ட இந்திய சமூகத்தின் (குறிப்பாக தமிழர்கள் மற்றும் குஜராத்தியர்கள்) ஆன்மிக மையமாக இது செயல்பட்டு வருகிறது. செசல்ஸ்…

Read More

ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் பெயரைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் என்பவருக்கு முன்னாள் அமைச்சருடன் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சிவசங்கரின் நேர்முக உதவியாளர் எனக் கூறிக்கொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன், சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. சீனிவாசன் என்பவரை அணுகினார். தனது மகனுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) பணி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, 2023 முதல் 2025 வரை படிப்படியாக ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் வாக்குறுதிப்படி வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல், பணத்தைத் திருப்பிக் கேட்ட சீனிவாசனை…

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள இரு நாள் மாநாடு வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டும் இருக்குமா அல்லது மாநிலத்தின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணும் சாதனை மாநாடாக அமையுமா என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, மாவட்ட ஆட்சியர்கள், துறை செயலாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த மாநாடு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அதன் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் என்றார். ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிடும் போது, ஆட்சியாளர்கள் முதலில் அந்த நாட்டின் உண்மை நிலையை அறிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை அறிவியல் ரீதியாக அளவிட்டு, புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தினசரி நிகழும் நிலை தொடர்வதாகச் சுட்டிக்காட்டிய உதயகுமார், இந்த மாநாட்டில் இத்தகைய கொடுமைகளுக்கு தீர்வு…

Read More

பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இரு நாள் மாநாடு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். மாநாடு மூன்று அமர்வுகளாக விரிவாக நடைபெற உள்ளது. முதல் அமர்வில் ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்துகொண்டனர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நகை பறிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவற்றைத் தடுக்க போலீஸ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை மீது கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும்…

Read More

நீலகிரியில் விளையும் கேரட்டுக்கு எப்போதும் மக்களிடையே தனி மவுசு உள்ளது. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் கேரட் பயிரிடுவதில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,500 முதல் 4,000 ஏக்கர் பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்படுவதாக விவசாயத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீலகிரி மண் மற்றும் குளிர் பிரதேச சூழலால் இங்கு விளையும் கேரட் அதன் சிறப்பான சுவை, நிறம் மற்றும் தரத்துக்காக உள்நாடு முழுவதும் புகழ் பெற்றுள்ளது. பொதுவாக நீலகிரியில் இருந்து தினசரி 100 முதல் 200 டன் வரை கேரட் பயிர்கள் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா போன்றவற்றுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்ற மலைக்காய்கறிகளான பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்டவையும் இந்தப் பகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மார்க்கெட்டுகளை சென்றடைகின்றன. கேரட்…

Read More

பதவியேற்பு விழாவை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் எம்.பியுமான மாணிக்கம் தாகூர் புதிய மாநிலத் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் சிறப்பு விழாவில் மாணிக்கம் தாகூர் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையிடமிருந்து பதவியை முறைப்படி பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியாக இது அமையும். இந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜேஷ்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர்…

Read More

விஜய் பாணியில் சூர்யாவும் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாரா? என்ற விவாதம் தற்போது இணையத்தில் அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகராக அறியப்படுகிறார். 1997-ம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அதன்பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, ‘சிங்கம்’, ‘ஏழாம் அறிவு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, நடிப்பு உலகில் மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அகரம் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கி, ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார். இத்தகைய சமூக அக்கறை காரணமாகவே அவரை மக்கள் தலைவராகப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

Read More

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்த சம்பவம் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை கட்சிக் கட்டுப்பாட்டுக்கு எதிரான செயல் எனக் கருதிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்டோரின் பதவிகளை உடனடியாகப் பறித்தார். பின்னர் வேலுமணி அணியினர் அதிமுகவில் மீண்டும் இணைந்தபோதும், அவருக்கு கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேலுச்சாமி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சில காலம் பதவியின்றி இருந்த வேலுமணிக்கு கடந்த வாரம் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பின்னணியில், தனது சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூருக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில்…

Read More