Author: editor5
என் அருகே சோபாவில் இடம் இருந்தும் ஸ்டாலின் அமராமல் இருந்தார், ஏன் என்று தெரியவில்லை? திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தலைமையிலான கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) விலகுவதாக அதன் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான முடிவை வரும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. ம.தி.மு.க. தலைவர் வைகோ, கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை விரிவாக விளக்கினார். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஸ்டாலினை சந்திக்க முயன்றபோது, அவர் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாகவும், “தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று கூறியதாகவும் வைகோ தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக தி.மு.க.வை ஆதரித்த போதிலும், அதிமுகவின் ஈ.பி.எஸ். (எடப்பாடி பழனிசாமி) முதல்வராவதற்கு தி.மு.க. முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) ஆகியவை தி.மு.க. கூட்டணியில் அமைச்சர் பதவிகளைப் பெற்ற நிலையில், ம.தி.மு.க.வுக்கு உரிய அங்கீகாரம்…
அவசியம் எனில் பத்திரப்பதிவுத்துறையில் இருந்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் முழுமையாக மாறியுள்ளது. தவெக ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து, முந்தைய திமுக அரசில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமாக எழுந்துள்ளன. புதிய அமைச்சர்கள், இந்த முறைகேடுகளை விசாரித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், மின்வாரியத் துறையில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு சார்ந்த இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சாலை அகலப்படுத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடு…
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயர் போட மாட்டோம்… போடவே மாட்டோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் அமைச்சர் ராஜ்மோகன். பள்ளி மாணவர்களுக்கான புதிய அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். சாதிப் பெயரை அட்டையில் அச்சிட மாட்டோம் என்று உறுதியளித்த அவர், “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதே தமிழக அரசின் அடிப்படை கொள்கை என்றும் வலியுறுத்தினார். செங்கோட்டையன் சமீபத்தில் பேசுகையில், மாணவர்கள் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் பெறும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, முதற்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் முகவரி, சாதிச் சான்றிதழ் விவரங்கள், இரத்த வகை, ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்படும் என்றார். இதன்மூலம் மாணவர்கள்…
இந்தத் தகவல்களை க்யூஆர் கோடு மூலம் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கும் யோசனை நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் க.செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கு சாதிப் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டை வழங்கப்படும் எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் தனது பேச்சுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: “வருவாய்த் துறையும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களுக்கு முகவரி, ரத்த வகை, ஆதார் எண், கல்வித் தகுதி உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இந்தத் தகவல்களை க்யூஆர் கோடு மூலம் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கும் யோசனை நடைபெற்று வருகிறது” என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்களை பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்கி வருவதாக அவர்…
பாக்யராஜ் மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தா கே. பாக்யராஜ் (73) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாக்யராஜ் தமிழ் திரையுலகில் பல தலைமுறை ரசிகர்களை ஈர்த்த ‘முந்தானை முடிச்சு’, ‘அந்த 7 நாட்கள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். எளிமையான கதைக்களம், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை தனது படங்களில் இணைத்து மக்களிடம் வரவேற்பைப் பெற்றார். தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி மலையாள சினிமாவுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், ‘மிஸ்டர் மருமகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கேரள ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பாக்யராஜின் மறைவுக்கு ஆழ்ந்த…
ஓட்டுநர்கள் தங்கள் பயண வருமானத்தில் 100 சதவீதத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு பயன்பெறுவார்கள். குஜராத் மாநிலத்தின் 14 முக்கிய நகரங்களில் இன்று (ஜூன் 27, 2026) பாரத் டாக்ஸி சேவையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்தியாவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் ஓட்டுநர்களுக்கு சொந்தமான முதல் டாக்சி முன்பதிவு சேவையாக இது கருதப்படுகிறது. இந்த திட்டம், போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத், சூரத், வடோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பவ்நகர் உள்ளிட்ட 14 நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை, விரைவில் முழு மாநிலத்துக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சஹகார் டாக்ஸி கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த தளம், மல்டி-ஸ்டேட் கூட்டுறவு சொசைட்டி சட்டம் 2002-ன் படி பதிவு செய்யப்பட்டது. ஓட்டுநர்களை வெறும் தற்காலிக பணியாளர்களாக நடத்தாமல், பங்குதாரர்களாக (shareholders) உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். தனியார் டாக்சி…
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்களும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுமான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பது குறித்து திமுக எம்பி பி. வில்சன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர்கள் அரசியல் மற்றும் பொது விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் அதிகார வரம்பு மற்றும் ரகசியக் கூட்டங்களில் பங்கேற்பு அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது என அவர் வலியுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ள இவர்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் அல்லாத இவர்கள் எந்த அதிகார அடிப்படையில் இத்தகைய கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை என்று வில்சன் தனது எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். “முதல்வர் ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுள்ள…
இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் திகழ்ந்தவர் கே.பாக்யராஜ். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே.பாக்யராஜ் (73) இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலை நடைபயிற்சியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மறைவு தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாக்யராஜ் 1953ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயிலில் பிறந்தார். இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகத் திரையுலகில் அறிமுகமான அவர், 1977ஆம் ஆண்டு ‘சுவரில்லா சித்திரங்கள்’ என்ற தனது முதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் ‘முந்தானை முடிச்சு’, ‘எங்க சின்ன ராசா’, ‘இது நம்ம ஆளு’, ‘அந்த 7 நாட்கள்’ உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களை இயக்கினார். சிக்கலான கதைக்களங்களை எளிமையான மொழியில் சொல்லும் திறன் கொண்ட ‘திரைக்கதை மன்னன்’…
மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிசபையில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாக நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக பிரதமரின் முதன்மை செயலாளராகவும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராகவும் பணியாற்றிய சக்திகாந்த் தாஸ் புதிய நிதி மந்திரியாக நியமிக்கப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்படலாம் அல்லது கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் பேச்சுகள் உள்ளன. மந்திரிசபை மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்பட்டன. இணை மந்திரிகளான பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்கோத்ரா ஆகியோர் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட்டனர். ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர்…
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் சாதி விவரங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த நடவடிக்கை தேசியக் கல்விக் கொள்கை (NEP-2020)-யின் ஒரு அங்கமான APAAR அட்டைத் திட்டத்தின் மறு உருவமே என்று விமர்சித்துள்ளார். வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிக்குச் செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் பெறும் நடைமுறைக்கு மாற்றாக அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும்” என்றார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு பதிவுகள் வெளியிட்ட…