Author: editor5

ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்து இன்றோடு ஓராண்டு கடந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI171), புறப்பட்ட சில வினாடிகளுக்குள் பேரழிவில் முடிந்தது. புறப்பட்ட 32 வினாடிகளில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை விடுதிக் கட்டிடங்களின் மீது விழுந்த இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் பயங்கரமாக வெடித்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர். தரை மட்டத்தில் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 19 பொதுமக்கள் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 260-ஐத் தாண்டியது. பலர் கடுமையாக காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் பெரும் தீயும் புகையும் எழுந்து,…

Read More

கொல்லூர் மூகாம்பிகை கோவில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு தரிசனம் செய்தார். நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் டெல்லியில் தங்கியிருந்த முதலமைச்சர், இன்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் செல்லும் பாதையில் கார் மூலம் பயணித்தார். மூகாம்பிகை அம்மன் கோயிலைச் சென்றடைந்த முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அம்மன் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்து, பிரார்த்தனை நடத்தினார். தரிசனம் முடிந்ததும் முதலமைச்சர் விஜய் மங்களூர் விமான நிலையம் திரும்பி, அங்கிருந்து…

Read More

‘நான் முதல்வன் திட்டம்’ குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்பு முதலமைச்சரிடம் கலந்துரையாடி முடிவு செய்வோம்” என்று அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் அம்மா அரங்கத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேடையில் உரையாற்றிய அமைச்சர், முன்னதாக பேசிய அதிகாரிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் குறித்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அவை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். “வேலைக்குச் செல்லும் குழந்தைகளைத் தவிர்த்து, அவர்களைப் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதே எங்கள் அரசின் முக்கிய நோக்கம்” என்று வலியுறுத்தினார். முதலமைச்சருக்கு குழந்தைகள் மீது தனிப்பட்ட ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “குழந்தைகள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக சிறப்பான திட்டங்களை அவர் செயல்படுத்துவார். குழந்தைகளுக்கான பல்வேறு…

Read More

நில அளவை ஆவணங்களை முழுமையாக கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில் வருவாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் இணைந்து முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தின. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் ஆகியோர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் விரிவான விவாதத்தில் ஈடுபட்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “மக்களுக்கு அனைத்து துறைகளிலும் எளிதான, விரைவான சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். அதன்படி வருவாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு பணியையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற்றது” என்றார். மூன்று துறைகளும் இணைந்து செயல்படும் திட்டங்களை விளக்கிய அவர், பட்டா வழங்கல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக…

Read More

தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு உள்ளூர் மக்கள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது பெற்றோருடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் துணிவும் தியாக உணர்வும் மிகுந்த அதிகாரியாகப் பணியாற்றிய அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவரது அசாத்திய துணிச்சலுக்கு இந்திய அரசு நாட்டின் உயரிய வீரத் தியாக விருதான ‘அசோக சக்ரா’ வழங்கிப் பாராட்டியது. தன் சொந்த ஊரில் இருந்து வந்த இந்த வீரரின் நினைவை நிலைப்படுத்தும் வகையில் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது மிகுந்த…

Read More

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் வெளிப்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. கான்பூர் நகரிலிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தேசியத் தலைவரும், சர்சங்கசாலகுமான மோகன் பகவத் நேற்று பயணம் செய்தபோது, அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பிரோசாபாத் மாவட்டம் வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது, அவர் பயணம் செய்த ஈ-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் பெட்டியின் வெளிப்புற கண்ணாடி விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, மோகன் பகவத் உள்பட அவருடன் பயணம் செய்த பாதுகாவலர்கள் மற்றும் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த உடனேயே ரயில் நிர்வாகம் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, துண்ட்லா சந்திப்பில் ரயிலை நிறுத்தியது. ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விரிவான ஆய்வு…

Read More

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என தவெக தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதாகப் பாராட்டப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் புகார் வந்த உடனேயே அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பெண்களுக்கு எதிரான எந்தவிதமான கொடுமைக்கும் தவெக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது. குற்றவாளி யார் ஆனாலும், அவரது அந்தஸ்து அல்லது செல்வாக்கு எவ்வளவு இருந்தாலும் தப்பிக்க முடியாது. இது மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்த முதலமைச்சர் விஜய்யின் அரசு என்பதால், நீதி வழங்குவதில் துணிச்சலும் வேகமும் இருக்கிறது. ‘மாடர்ன் மனுநீதிச் சோழன்’ அரசு என்று வர்ணிக்கப்படும் இந்த அரசு, தப்பு செய்தவர்களைத் தண்டிப்பதோடு, குற்றத்துடன் தொடர்பில்லாதவர்கள் பாதிக்கப்படாமல் நியாயமான விசாரணை மற்றும்…

Read More

மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு பொருளாதாரப் படுகுழியில் விழுந்துவிட்டதாகவும், கடன் சுமையில் தத்தளிப்பதாகவும் பொய்யான கதைகளைப் பரப்பிய இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகளைப் பெருமையாக வாசித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழ்வதாகவும், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் பட்டியலிட்டார். இந்த சாதனைகள் அவரது ஒரு மாத கால ‘Sofa Model’ ஆட்சியில் நிகழ்ந்தவையா அல்லது கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல்…

Read More

தமிழகத்தில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்குவதை உறுதி செய்ய உரிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி வழக்கில் பதிலளிக்க, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 10 அன்று தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை முதலில் இசைக்கப்பட்ட பின்னரே தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. இந்த வரிசை மாற்றம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுக்கு எதிரான இந்த நடவடிக்கை தமிழ் பண்பாட்டு அடையாளத்தை பாதிக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்…

Read More

வங்கிகளில் பெற்ற கடனை அடைக்க 100 ஆண்டு பழமையான மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளார் விவசாயி ஒருவர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயம் பல தலைமுறைகளாக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகவும், பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான பருவநிலை மாற்றங்கள், கட்டுப்படுத்த முடியாத பூச்சித் தாக்குதல்கள் மற்றும் வரண்டு போகும் மழைப்பொழிவு போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால், முன்பு 41,000 ஹெக்டேர் பரப்பளவில் செழித்து வளர்ந்த மா தோட்டங்கள் தற்போது 33,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளன. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தை ஓட்டி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு சுமார் 5 சதவீத விவசாயிகள் மா மரங்களை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மாவட்டத்தில் மா விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

Read More