தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யரும், தொழில்​நுட்​பத் தேர்​வு​கள் வாரி​யத்​தின் தலை​வரு​மான ஜெ.இன்​னசென்ட் திவ்யா வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறியுள்ளதாவது: தட்டச்சு, சுருக்​கெழுத்​து, கணக்​கியல், அரசு கணினி சான்​றிதழ் தேர்வு (COA) ஆகிய தொழில்நுட்பத் தேர்​வு​கள் புதிய பாடத்​திட்​டத்​தின்​கீழ் பிப்​ர​வரி மாதம் நடத்​தப்பட உள்​ளன.

இத்​தேர்​வு​கள் ஏற்​கெனவே இருந்து வரும் பாரம்​பரிய முறை​யிலும், கணினிவழி முறை​யிலும் நடத்​தப்​படும். பாரம்​பரிய வழி​முறையி​லான சுருக்​கெழுத்து தேர்வு பிப்​ர​வரி 7 மற்​றும் 8-ம் தேதி​யும், கணக்​கியல் தேர்வு பிப்​ர​வரி 9-ம் தேதி​யும் தட்டச்சு தேர்​வு​கள் பிப்​ர​வரி 14 மற்​றும் 15-ம் தேதி​யும் நடை​பெறும்.

அதே​போல், கணினி வழியி​லான தட்டச்சு தேர்​வு, சுருக்​கெழுத்து தேர்வு மற்​றும் அரசு கணினி சான்​றிதழ் தேர்வு பிப்​ர​வரி 23 முதல் ஏப்​ரல் 20 வரை நடை​பெறும். இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவு இன்று (டிச.30-ம் தேதி) தொடங்கி ஜனவரி 19-ம் தேதி முடிவடை​யும். தேர்​வர்​கள் https://tndtegteonline.in/ என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம்.

தேர்வு முடிவு​கள் ஏப்​ரல் 30-ம் தேதி வெளி​யிடப்​படும். தேர்ச்சி பெற்​றவர்​கள் டிஜிட்​டல் சான்​றிதழ்​களை (e-certificates) மே 27 முதல் ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version