Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»2026 தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்… இபிஎஸ் முடிவு செய்வார் – பாஜக துணைத்தலைவர்
    தேர்தல் 2026

    2026 தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்… இபிஎஸ் முடிவு செய்வார் – பாஜக துணைத்தலைவர்

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025Updated:June 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    epsvsannamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் கூறியுள்ளார்.

    சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்து, மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தோம் என்றார். தமிழகத்தின் மிகப்பெரிய திட்டமாக இருக்கக்கூடிய நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் காவிரி ஆற்றிலே வந்து கலக்கக்கூடிய கிளை நதிகளை அதே இடத்தில் சுத்தப்படுத்தி காவிரியில் கலக்க செய்ய வேண்டும். அதேபோல் பெருநகரங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்தப்படுத்தி காவிரி கலக்கச் செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ.11,900 கோடி. முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 990 கோடி ரூபாய் மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ளது.

    இது தொடர்பாக முதல் நிலையில் முதலில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்க வந்தேன். இது போன்ற மிகப்பெரிய திட்டங்களை எல்லாம் விவசாயிகளுக்காக தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நிலையில் உண்மையான விவசாயிகளை பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறார் ஸ்டாலின். காவேரி தூர் வாராத நிலையில் கடைமடைக்கு தண்ணீர் செல்லாதது அனைத்தும் உண்மை என்றார்.

    பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 78 இடங்கள் கேட்போம் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கே.பி. ராமலிங்கம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு, எத்தனை சீட் என்பதை அவர் தான் முடிவு செய்வார் என்று கூறினார்.

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாரதிய ஜனதா கட்சி 100 சதவீதம் உறுதியாக உள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய கடுமையாக உழைப்போம் என்ற கேபி ராமலிங்கம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் ஆசை உண்டு என்றும் ஒவ்வொரு கட்சியும் அதற்காக தான் உழைக்கிறார்கள் என்றும் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுபான மனமகிழ் மன்றம் குறித்து புகார் வந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் .. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு…
    Next Article புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி கைதா?.. 100-க்கான ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு..
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.