Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பு!
    தமிழ்நாடு

    டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250625 WA0003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்பக் கொண்டு வரும்போது அந்த 10 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது.

     

    இந்த புதிய பணிகளுக்கு தற்போதுள்ள டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலி பாட்டில்களை சேகரிக்க தனி இடம் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

    தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணி கூடுதல் சுமையாக அமையும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சங்கம் இந்தக் குழுவை அணுகலாம்” எனத் தெரிவித்தார்.

    இதனையடுத்து, இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Buyback Scheme Chennai Committee Director Empty Bottles Madras High Court Staff Grievances Tamil Nadu government Tasmac இயக்குநர் ஊழியர் குறைகள் காலி பாட்டில்கள் குழு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் தமிழக அரசு திரும்பப் பெறும் திட்டம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து… தோல்விக்கான காரணம் என்ன… சுப்மன் கில் விளக்கம்…
    Next Article பெட்ரோல் பங்கில் காவலர் மீது தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.