Close Menu
    What's Hot

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு… அரைநிர்வாணத்தில் குத்தாட்டம்…
    தமிழ்நாடு

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு… அரைநிர்வாணத்தில் குத்தாட்டம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025Updated:June 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், பணிக்கு வந்துள்ள மற்ற அர்ச்சகர்கள் கணேசன், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தி ஆபாசமாக ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று 3 அர்ச்சர்கள் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் அர்ச்சர்களை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் .

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். மேலும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள் மேலும் இதனைத் தொடர்ந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

    இந்நிலையில் இந்த கோயிலில் பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் அரைநிர்வாணத்தில் ஆபாச நடனம் ஆடுவதும் மதுபோதையில் அட்டூழியங்கள் செய்வதும் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதும் உள்ளிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கும் சமயத்தில் இந்தக் கோவிலின் அர்ச்சகர்கள் செய்யும் அட்டூழியம் தற்போது வெளியான இந்த வீடியோவால் பக்தர்கள் கொந்திளிப்பில் உள்ளனர். கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஏன் கண்டு கொள்ளவில்லை கோவிலில் சிசிடிவி கேமராக்களை பார்த்து இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்விகள் எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… அருவியில் குளிக்க வனத்துறை தடை…
    Next Article மோகன்லால் – மம்முட்டி இணையும் புதிய படம்… டைட்டிலை அறிவித்தது படக்குழு…
    Editor TN Talks

    Related Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    June 4, 2026

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.