Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!
    Featured

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 26 16h53m51s381
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம், கடந்த ஜூலை 17-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவல் நிலையத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், கடந்த ஜூலை 23-ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜூலை 24-ஆம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    vlcsnap 2026 07 26 16h53m23s003

    இந்த நிலையில், அமுதா நகரில் உள்ள அருணாச்சலத்தின் இல்லத்துக்கு இன்று சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், அவரது தாய், தந்தை மற்றும் தம்பியை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அருணாச்சலத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது அருணாச்சலத்தின் குடும்பத்தினர், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    இதற்கு பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தின் கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் வலியுறுத்தி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்பட்டது.

    AnithaRadhakrishnan CustodialDeath JusticeForArunachalam thoothukudi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!
    Next Article “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்
    Editor web2
    • Website

    Related Posts

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    July 26, 2026

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    July 26, 2026

    டெல்லி போராட்டத்தில் அதிரடிப்படையின் விதிமீறல்கள்: புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.