Close Menu
    What's Hot

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை… அது அவர்களின் வேலையும் அல்ல…
    இந்தியா

    இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை… அது அவர்களின் வேலையும் அல்ல…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025Updated:August 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உண்மையான இந்தியர் யார் என நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை எனவும், அது அவர்களின் வேலை இல்லை எனவும் பிரியங்கா காந்தி எம்.பி., கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்ரா நிகழ்ச்சியில், எல்லையில் சீனப்படைகளுடனான மோதல் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் இந்திய ராணுவம் பற்றி தரம் தாழ்ந்து பேசியதாக உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது. சம்மன் உத்தரவையும், புகாரையும் ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் திபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 2 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாக உங்களுக்கு (ராகுல்காந்தி) எப்படி தெரியும்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் நம்பகமான ஆதாரம் இருக்கிறதா?. எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை பேசுகிறீர்கள்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோன்று பேச மாட்டீர்கள். நீங்கள் எதிர்க்கட்சி தலைவர். இதை ஏன் நீங்கள் நாடாளுமன்றத்தில் சொல்லவில்லை?. சமூக வலைத்தளங்களில் ஏன் சொல்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

    இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி, உண்மையான இந்தியர் யார்? என்பதை நீமன்றம் தீர்மானிப்பதில்லை; அது நீதிபதிகளின் வேலை அல்ல. என் சகோதரர் (ராகுல்காந்தி) ஒருபோதும் ராணுவத்திற்கு எதிராக செயல்படமாட்டார். நமது ராணுவம், ராணுவ வீரர்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளார். எனவே, இது ஒரு தவறான கருத்து.

    அரசாங்கத்தை கேள்வி கேட்பது எதிர்க்கட்சி தலைவரின் கடமை; அதைத்தான் அவர் செய்கிறார்.இது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை; அவருக்கு பதிலளிக்க மத்திய அரசு விரும்பவில்லை; அதனால்தான் இந்த தந்திரங்களையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நடத்தக்கூட முடியாத அளவுக்கு மத்திய அரசு பலவீனமாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கி கடன் முறைகேடு வழக்கு… அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானி…
    Next Article இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி… தொடரை சமன் செய்த இந்திய அணி… சச்சின் பாராட்டு…
    Editor TN Talks

    Related Posts

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    December 28, 2025

    அசாமில் வங்கதேசத்தினர் 40% பேர் வந்துவிட்டனர்!. எச்சரித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா!

    December 28, 2025

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    ‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

    ‘ரஜினியை வைத்து காதல் படம்’ – இயக்குநர் சுதா கொங்காரா ஆசை

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.