Close Menu
    What's Hot

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீண்டும் ஒரு ரிதன்யா..! – வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
    தமிழ்நாடு

    மீண்டும் ஒரு ரிதன்யா..! – வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dow
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பத்தே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது அதே திருப்பூர் மாவட்டத்தில் மற்றொரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு காரணமான கணவன் குடும்பத்தினரை கைது செய்யாமல் பெண்ணின் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 120சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளிவற்றை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையான வகையில் 50 லட்சம் ரூபாய் பணம் வருவதை அறிந்து, அதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதனால், திருமணமான 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு பிரீத்தி வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    WhatsApp Image 2025 08 06 at 5.59.47 PM

    இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாப்பிள்ளை குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    Dowry case Dowry harassment rithanya tiruppur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமலாக்கத்துறையில் ஆஜரான விஜய் தேவரகொண்டா… என்ன நடந்தது?
    Next Article தமிழகத்தின் சிற்பி – மு.க ஒரு சகாப்தம்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.