Close Menu
    What's Hot

    42 நாட்கள் காக்க வைப்பதா?. வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பில் சீமான் அச்சம்!. தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு!.

    நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!. வீரவணக்கம் செலுத்திய முதல்வர்!

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்
    அரசியல்

    “பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025Updated:November 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vanathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹாரில் தோல்வி உறுதியாகிவிட்டதால் மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார் ராகுல் காந்தி என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. ‘இண்டி’ கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் வழக்கம் போல் வாக்கு திருட்டு என்ற பொய்யை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

    அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அவரிடம் ஆதாரம் கேட்டும் கொடுக்கவில்லை. எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது என பிஹாரில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்த பின், ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமானது. தற்போது ஹரியானாவில் லட்சக் கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வழக்கம் போல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    இது தகவல் தொழில்நுட்ப யுகம். பொய்யும், புரட்டும் அடுத்த நொடியே அம்பலப்பட்டு விடும். அதன் காரணமாகவே தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்கும் போது, அதை கண்காணிக்கவே அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். அவர்களை மீறி வாக்குச்சாவடிக்கு தொடர்பில்லாதவர்களை யாரும் நீக்க முடியாது.

    பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வந்தர்கள்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அக்கட்சி கூட்டணியின் வாக்கு வங்கி. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியால் அவர்கள் இந்தியாவில் வாக்காளர்களாக முடியாது என்பதால் தான், இதை ‘இண்டி’ கூட்டணி எதிர்க்கிறது.

    பொய்களை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் ராகுல் காந்திக்கு, பொய்களை பரப்பியே ஆட்சி செய்யும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. பொய்யுக்கு பொய் சாட்சி அளித்துள்ளது. இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல் காந்தி. அவரையும், அவரது கூட்டணியையும் பிஹார் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் நிராகரிப்பார்கள்” என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    rahul#vanathi#bihar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல்
    Next Article தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    February 25, 2026

    எளிமையின் சிகரம்!. விடைபெற்றார் கம்யூனிஸ்ட் சிங்கம்!. 100 ஆண்டு கால கொள்கை பயணம் நிறைவு!

    February 25, 2026

    காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? – முதலமைச்சருடன் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    42 நாட்கள் காக்க வைப்பதா?. வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பில் சீமான் அச்சம்!. தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு!.

    நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!. வீரவணக்கம் செலுத்திய முதல்வர்!

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    Trending Posts

    2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?. இளைஞர்களுக்கு வாய்ப்பா?. திமுக திட்டம் என்ன?

    February 26, 2026

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    போராளி நல்லக்கண்ணு: போராட்டம்.. சிறைவாசம்.. எளிமை… வேட்கை…

    February 26, 2026

    42 நாட்கள் காக்க வைப்பதா?. வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பில் சீமான் அச்சம்!. தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு!.

    February 26, 2026

    8ம் வகுப்பு புத்தகத்தில் சர்ச்சை பாடம்!. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!.

    February 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.