Close Menu
    What's Hot

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் கிடையாது – அண்ணாமலை விமர்சனம்!
    அரசியல்

    உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் கிடையாது – அண்ணாமலை விமர்சனம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை முதலமைச்சராக உள்ள உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லாதது நம்முடைய சாபக்கேடு என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் மெட்ரோ ரயில் கோவைக்கும், மதுரைக்கும் மறுக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமரை சந்திக்கத் தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது, “பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி கோவை வந்தபோதும், மு.க.ஸ்டாலின் வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூட பிரதமர் மோடி வந்தால் சந்திக்க வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், ஒவ்வொருமுறையும் ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சருக்கு கோவை, மதுரைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது. ஆகையால்தான் மெட்ரோ விவகாரத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு மதுரை, கோவைக்கு மெட்ரோ வேண்டுமென்று கொடுத்த அறிக்கையில் என்ன தவறுகள் உள்ளது என கடிதம் வெளியிட்டுள்ளோம். அது DPR வரைமுறைக்கு உட்பட்டதாக இல்லை. மீண்டும் அதனை சரி செய்து மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

    மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு, “இந்தியா முழுவதும் வரைமுறை வகுக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் பார்வையில் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு செய்யப்படும். அந்தவகையில், தமிழகத்திற்கான நிதி பகிர்வு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மெட்ரோவுக்கு என அதிக நிதி கொடுக்கப்பட்டது தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு தான்” என பதிலளித்தார்.

    மேலும், “ஈரப்பதம் என்பது விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனை தான். அதிக மழை பெய்தபோது, மத்திய அரசு நெல் ஈரப்பதத்தை 19.5 வரை தளர்த்தியுள்ளது. நெல்லை பாதுகாக்க புதிய குடோன்கள் கட்டவேண்டும். தார்ப்பாய்கள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ரூ.360 கோடி ஊழல் நடந்துள்ளது.

    குறிப்பாக, தயாராக இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய 60 நாட்கள் எடுத்துள்ளனர். உடைந்த அரிசியாக இருந்தாலும், அதனை 5 – 6 % எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், திமுக அரசு ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற தவறிவிட்டது. இதில் முக்கிய குற்றவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

    மேலும், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதலில் உதயநிதி என்ன பணி செய்தார்? என அவர்கள் கூற வேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜே கிடையாது. இது நம்முடைய சாபக்கேடு” என அண்ணாமலை விமர்சித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண் மையக் கதையில் மீண்டும் கல்யாணி!
    Next Article ‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்’ – சௌமியா அன்புமணி ஆவேசம்!
    Editor TN Talks

    Related Posts

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    December 25, 2025

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    December 25, 2025

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.