Close Menu
    What's Hot

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    சென்னை மக்களே நோட்!. இன்று முதல் புறநகர் ரயில்கள் ரத்து!.

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»வலிமையாக மீண்டு வருவோம் – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து சுப்மன் கில் பதிவு
    விளையாட்டு

    வலிமையாக மீண்டு வருவோம் – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து சுப்மன் கில் பதிவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Shubman gill discharged from hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அணி தென்னாப்பிரிக்கா எதிரான தோல்வியில் இருந்து வலிமையாக மீண்டு வரும் என இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் 30 ரன்களில் தோற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

    அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து சுப்மன் கில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், அமைதியான கடல் எவ்வாறு வழி நடத்துவது என்பதை கற்றுக் கொடுக்காது, புயல் தான் உறுதியான கைகளை உருவாக்கும். நாம் சக வீரர்களை தொடர்ந்து நம்புவோம், ஒருவருக்கு ஒருவர் போராடி முன்னேறுவோம், வலுவாக மீண்டெழுவோம்” என தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் தொடர் தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், இந்திய பயிற்சியாளராக எனது எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார். மேலும் தனது பயிற்சியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கைப்பற்றியதாகவும், இங்கிலாந்து மண்ணில் 2-2 என தொடரை சமன் செய்ததாகவும் பெருமிதம் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது?
    Next Article ’ஜெயிலர் 2’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
    Editor TN Talks

    Related Posts

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    February 18, 2026

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    சென்னை மக்களே நோட்!. இன்று முதல் புறநகர் ரயில்கள் ரத்து!.

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Trending Posts

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    February 20, 2026

    சென்னை மக்களே நோட்!. இன்று முதல் புறநகர் ரயில்கள் ரத்து!.

    February 20, 2026

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.