Close Menu
    What's Hot

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா!. பிரதமர்  மோடி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»வலிமையாக மீண்டு வருவோம் – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து சுப்மன் கில் பதிவு
    விளையாட்டு

    வலிமையாக மீண்டு வருவோம் – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து சுப்மன் கில் பதிவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Shubman gill discharged from hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அணி தென்னாப்பிரிக்கா எதிரான தோல்வியில் இருந்து வலிமையாக மீண்டு வரும் என இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் 30 ரன்களில் தோற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

    அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து சுப்மன் கில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், அமைதியான கடல் எவ்வாறு வழி நடத்துவது என்பதை கற்றுக் கொடுக்காது, புயல் தான் உறுதியான கைகளை உருவாக்கும். நாம் சக வீரர்களை தொடர்ந்து நம்புவோம், ஒருவருக்கு ஒருவர் போராடி முன்னேறுவோம், வலுவாக மீண்டெழுவோம்” என தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் தொடர் தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், இந்திய பயிற்சியாளராக எனது எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார். மேலும் தனது பயிற்சியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கைப்பற்றியதாகவும், இங்கிலாந்து மண்ணில் 2-2 என தொடரை சமன் செய்ததாகவும் பெருமிதம் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது?
    Next Article ’ஜெயிலர் 2’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
    Editor TN Talks

    Related Posts

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா!. பிரதமர்  மோடி!.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.