Close Menu
    What's Hot

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாகையில் கனமழை நீடிப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    தமிழ்நாடு

    நாகையில் கனமழை நீடிப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SL
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக இன்று மதியம் 12 மணி வரை 94 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

    மாநிலத்தில் மிக அதிகபட்சமாக நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை கோடியக்கரை பகுதியில் 31.20 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல திருப்பூண்டியில் 20 சென்டிமீட்டர், வேளாங்கண்ணியில் 18 சென்டிமீட்டர், நாகையில் 17 சென்டிமீட்டர், வேதாரண்யத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    டிட்வா புயல் காணமாக நாகை மாவட்டத்தில் அதி கனழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று பகலிலும் இடைவிடாத கனமழை தொடர்ந்தது. இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த 115 வீரர்கள் நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளனர்.

    நாகையில் இரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழையால் நாகூர் வள்ளியம்மா நகர் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 50 குடும்பங்கள் வாழும் இந்த பகுதியில் பத்து வருடங்களுக்கு மேலாக முறையான வடிகால் வசதி இல்லாமல் மழை காலங்களில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். உடனடியாக துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போதைக்கு முகாம்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    டிட்வா புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் கடலோரப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, டாட்டா நகர், ஆரியநாட்டுத் தெரு, செருதூர், காமேஷ்வரம் , கல்லார், மணியன் தீவு, செருதலைகாடு, வானவன் மகாதேவி, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 3500 நாட்டு படகுகள், 750 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையை நெருங்கியது ‘டிட்வா’ புயல்; திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’
    Next Article தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிப்பு: தென்காசியில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.7 ஆயிரமாக உயர்வு
    Editor TN Talks

    Related Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    June 16, 2026

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    June 16, 2026

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    மதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்

    பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.