Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ரூ.4,000 கோடி என்ன ஆச்சு? ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி
    அரசியல்

    ரூ.4,000 கோடி என்ன ஆச்சு? ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11549573 nainar nagendran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட அந்த ரூ.4,000 கோடி என்னதான் ஆச்சு என்று மழை வெள்ளத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அக்கட்சி புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சியும், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இருக்கும் காட்சி உள்ளது.

    Image

    இதை ரீ ட்விட் செய்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “திமுக அரசால் டிசம்பர் தோறும் தத்தளிக்கும் தலைநகர்! மழைநீர் வடிகால் பணிகளுக்காக நாலாயிரம் கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக நான்கரை ஆண்டுகளாகத் திமுக அரசு பெருமை பேசிய நிலையில், நாலாப்புறமும் சென்னையில் மழைநீர் தேங்கியிருக்கிறது. உண்மையில் நாலாயிரம் கோடி என்னதான் ஆனது?

    நான்கு பம்பு செட்டுகள் வாங்கத்தான் ரூ.4,000 கோடி செலவழிக்கப்பட்டதா? அல்லது “நாடு போற்றும் நல்லாட்சி” என்று நாணமே இல்லாமல் வெற்று விளம்பரம் வெளியிட செலவழிக்கப்பட்டதா? ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து ஒவ்வொரு டிசம்பர் மாதமும் வெள்ளத்தில் மிதக்கவிடும் சாதனை போதாதென்று ஆட்சி முடியும் கடைசி ஆண்டில் டிசம்பர் மாதம் தொடங்கிய மூன்று நாட்களுக்குள்ளேயே சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்கவிட்டுப் பெரும் சாதனை புரிந்திருக்கிறது அறிவாலய அரசு.

    இந்தக் கொடூரத்திற்கு மத்தியில், சென்னையில் பல இடங்களில் மழைநீரோடு கழிவுநீரையும் கலக்கவிட்டு, நோய்த் தொற்றை உருவாக்கி, மக்களைக் கொல்லும் எமனாகவும் உருமாறியிருக்கிறது திமுக அரசு. மொத்தத்தில், மழைநீர் வடியக் கூட வழிவகுக்க இயலாத திறனற்ற நிர்வாகத்தை வைத்துக் கொண்டு விடியல் அரசு என்று மார்தட்டிக் கொள்வதைக் கண்டால் தலையில் தான் அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது!” என குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇது தமிழ்நாடா, கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் கொலைக்கு இபிஎஸ் கண்டனம்
    Next Article ஐசிசி உலகத் தரவரிசை புள்ளி பட்டியல் வெளியீடு ; இந்தியாவின் நிலை என்ன !!!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.