Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஆட்சி மாறியதும் டிஎன்பிஎஸ்சி அட்டவணை மாறும், அதிக வேலை கிடைக்கும்.. அன்புமணி உறுதி
    அரசியல்

    ஆட்சி மாறியதும் டிஎன்பிஎஸ்சி அட்டவணை மாறும், அதிக வேலை கிடைக்கும்.. அன்புமணி உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    டி.என்.பி.எஸ்.சி மூலம் 2026ஆம் ஆண்டில் வெறும் 6 போட்டித் தேர்வுகள் மட்டுமே என விமர்சித்துள்ள அன்புமணி ராமதாஸ், ஆட்சி மாறியதும் அட்டவணையும் மாறும், அதிக வேலை கிடைக்கும் என உறுதி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    தமிழக அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை  தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம்  நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை  த்மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.   மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான  முதல் தொகுதி பணிகள், கிராம நிர்வாக அதிகாரி  உள்ளிட்ட  பதவிகளுக்கான  4-ஆம்  தொகுதி பணிகள்  என  மொத்தம் 6 போட்டித் தேர்வுகள் மட்டும் தான் அடுத்த ஆண்டில் நடத்தப்படவுள்ளன. இது எந்த வகையிலும் போதுமானவையல்ல.

    2025-ஆம் ஆண்டில்  மொத்தம் 7 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. அதன்படி  7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கையை வெளியிட்டு விட்ட டி.என்.பி.எஸ்.சி, அவற்றில் சில தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த தேர்வுகளின் மூலம்  9757  பேர் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.

    2026-ஆம் ஆண்டில்  6 போட்டித் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளன என்பதையும்,  அத்தேர்வுகளுக்கான  பணிகளின் காலியிடங்களாக தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது  அதிகபட்சமாக 6 ஆயிரம் பேருக்குக் கூட அடுத்த ஆண்டில் வேலை வழங்கப்படாது என்பது தான் உண்மை.  அரசு வேலைகளுக்காக 1.30 கோடி படித்த இளைஞர்கள் காத்திருக்கும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 ஆயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு கூறுவது  கேலிக் கூத்தாகும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  அதுமட்டுமின்றி, கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு பணிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் நிரந்தர அரசு வேலைகளை திமுக அரசு வழங்கியிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு எந்த அளவுக்கு  துரோகம் செய்துள்ளது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை  திமுக அளித்திருந்தது.  அவற்றில்  66 வாக்குறுதிகளை மட்டும் தான்  திமுக அரசு முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 439  வாக்குறுதிகள்  முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அந்த வகையில்  தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக  439 துரோகங்களை செய்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். அந்த  439 துரோகங்களிலும் மிகவும் மோசமானது படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி  ஏமாற்றியது தான்.

    அரசு வேலை வழங்குவதாகக் கூறி  படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.  அதைத் தொடர்ந்து அமையும் புதிய அரசில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்  தேர்வுகளின் அட்டவணை நீளமாகும்; குறைந்தது 50 ஆயிரம் நான்காம் தொகுதி பணிகள் உள்பட 2026-ஆம் ஆண்டில்  டி.என்.பி.எஸ்.சி மூலம் வழங்கப்படும் அரசு பணிகளின்  எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அந்தப் பதிவில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலி செய்திகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறதா..? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரபரப்பு பேச்சு..!!
    Next Article தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    “ஊழல் திமுக ஆட்சியை அகற்ற ஆலோசித்தோம்” – இபிஎஸ்சை சந்தித்தபின் பியூஷ் கோயல் தகவல்

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.