Close Menu
    What's Hot

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»“2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?” – கம்பீர் ஓபன் டாக்
    விளையாட்டு

    “2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?” – கம்பீர் ஓபன் டாக்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gmbb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா என்பது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. சனிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பின்னர் செய்தியாளர்களிடம் கம்பீர் பேசியதாவது:

    “ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவம் அணியில் இருப்பது முக்கியம் என கருதுகிறேன். தங்கள் அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். வரும் நாட்களிலும் இதை அவர் தொடருவார்கள். இது ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு முக்கியமானதாகும்.

    2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் இரண்டு ஆண்ட காலம் உள்ளது. நாம் எப்போதும் நிகழ் காலத்தில் இருப்பது சிறப்பானது. இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்புகளை பற்ற காத்திருக்கின்றனர். ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த தொடரில் தங்களது திறனை வெளிப்படுத்தி உள்ளனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இறுகப்பற்றி, பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பார்மெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக கருதுகிறேன்” என்றார்.

    கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற தருணத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அறிவித்தனர். தொடர்ந்து நடப்பு ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அடுத்தடுத்து அறிவித்தனர்.

    இப்போது இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இருவரும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரில் இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” – ராஜ்நாத் சிங் கருத்து
    Next Article சின்மயிக்கு அழுத்தம் கொடுப்பது யார்? விரைவில் உண்மை வெளிவரும்: நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேட்டி
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.