Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»சின்மயிக்கு அழுத்தம் கொடுப்பது யார்? விரைவில் உண்மை வெளிவரும்: நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேட்டி
    சினிமா

    சின்மயிக்கு அழுத்தம் கொடுப்பது யார்? விரைவில் உண்மை வெளிவரும்: நடிகர் ரஞ்சித் பரபரப்பு பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rnj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனக்கு எது நடந்தாலும் பகிரங்கமாக சொல்லக்கூடிய பாடகி சின்மயி, இயக்குநர் மோகன் விவகாரத்தில் தனக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பதை விரைவில் கூறுவார் என எதிர்பார்ப்பதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    ‘வந்தே மாதரம்’ பாடல் எழுதி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, ‘சுற்றுச்சூழலை பாதுகாக்க ஓடுங்கள், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க ஓடுங்கள்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமுருகன் பூண்டியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    தனியார் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 வயது முதல் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை ஆண்- பெண் இருபாலருக்குமான 4 பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் போட்டியை தொழிலதிபர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மோகன் ஜி படத்தில் பாடியது குறித்து பாடகி சின்மயி தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஞ்சித், “கலைஞர்களுக்கு மதமோ, ஜாதியோ, மொழியோ கிடையாது. மத்திய அரசின் சென்சார் போர்டு மூலமாக தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட பாடலின் அர்த்தம் தெரிந்து பாடிவிட்டு, தற்போது பாடகி சின்மயி அதுகுறித்து விமர்சித்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மோகன் ஜி ஒரு நல்ல இயக்குநர். ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் கதையை நான் கேட்டுள்ளேன். மிகவும் நல்ல கதை. பிளவுபடுத்தப்பட்டு இருக்கிற மக்களை இணைப்பதற்கான ஒரு கதையாகத்தான் அந்த கதையை பார்க்கிறேன். இதுபோன்ற ஒரு கதைக்கு பாடலை பாடிவிட்டு, எந்த விஷயத்திற்காக அவர் எதிர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    கடந்த காலங்களில் தனக்கு நடந்தவற்றை பகிரங்கமாக பேசிய பாடகி சின்மயி, இந்த விவகாரத்திலும் தனக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து விரைவில் பகிரங்கமாக சொல்வார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

    தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “நாம் அனைவரும் சாமி கும்பிடத்தான் அங்கு செல்கிறோம். வேறு எந்த நோக்கமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடக்கும். அது தொடர்ந்து நடைபெறும் என்று நினைக்கிறேன்” என பதிலளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா?” – கம்பீர் ஓபன் டாக்
    Next Article ஜோதிட நாள்காட்டி 08.12.2025
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.